Categories: தமிழகம்

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை திருடிய பாஜக பிரமுகரின் கணவர்.. ஆட்களை வைத்து மிரட்டுவதாக பெண் கண்ணீர்!

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை திருடிய பாஜக பிரமுகரின் கணவர்.. ஆட்களை வைத்து மிரட்டுவதாக பெண் கண்ணீர்!

கோவை மாவட்டம் காரமடை கெம்மாரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மனைவி கௌரி. இவர் பாஜக பிரமுகரின் கணவர் மகேந்திரகுமார் என்பவர் தங்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அனைத்து பொருட்களை திருடிச் சென்றதோடு, அடியாட்களை வைத்து மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து கெளரி கூறுகையில், தனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், கடந்த ஆண்டு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மகேந்திரகுமார், என்பவருக்கு சொந்தமான 6.48 ஏக்கர் நிலத்தை வாங்க கிரைய ஒப்பந்தம் பத்திரம் போட்டதாகவும், இதற்கான பணத்தில் பெரும்பாலும் பங்கு கொடுக்கப்பட்டு, அந்த நிலத்தில் தாங்கள் வீடு கட்டி அங்கு தனது உறவினர்கள் இருந்து வரும் நிலையில், நிலத்தை மகேந்திரகுமார் தங்களுக்கு கிரையம் செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் என தெரிவித்தார்.

இது குறித்து பல முறை கேட்டும் எந்த பதிலும் அளிக்காமல் தற்போது இடத்தை காலி செய்து கொடுக்குமாறு கேட்டு மிரட்டி வருகிறார் என்றார்.

இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மகேந்திரகுமார் தனது ஆட்களை கொண்டு மிரட்டி வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கு வந்து அவரது ஆட்களுடன் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து, 2 லாரிகளில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களை திருடிச் சென்றதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீஸார் அழைத்து பேசியதால் ஒரு லாரி பொருட்களை மட்டும் ஒப்படைத்த நிலையில் மற்ற பொருட்களை கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும், மகேந்திரகுமாரின் மனைவி பிரீத்தி பாஜக நிர்வாகி என்பதால் அதனை வைத்து தங்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நிலம் தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அத்துமீறி வீட்டில் உள்ள பொருட்களை திருடுவது மற்றும் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கம்பி போன்ற இரும்பு ஆயுதங்களோடு உலா வருவதாகவும், தங்களது பூட்டிய வீட்டை திறந்து மது குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே வீசிச் சென்றுள்ளதோடு அடிக்கடி அப்பகுதி சுற்றிவருவதாக தெரிவித்தார்.எனவே மகேந்திரகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

துரோகம் செய்த ஐபிஎல்..அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்..வார்னர் எடுத்த முடிவு .!

பாகிஸ்தான் பி.எஸ்.எல். லீக்கில் வார்னரின் புதிய பாதை உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 2025 ஐபிஎல் தொடருக்கு மத்தியில்,பாகிஸ்தான்…

6 hours ago

பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவின் கருப்பு நாள் தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயமான பாரதிராஜா குடும்பத்தில் பெரும் துயர சம்பவம் நிகழ்ந்து,அனைவரையும் அதிர்ச்சியாக்கி,சோகத்தில்…

7 hours ago

தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!

பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல்,தென்னிந்திய சினிமாவை பாராட்டி,பாலிவுட் அந்தத் தரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.மேலும், தென்னிந்தியாவில் குடியேறவும்…

8 hours ago

அதிர்ச்சி…! அண்ணாமலைக்கு எதிராக வழக்குப்பதிவு : ஆக்ஷன் எடுக்கும் சைபர் கிரைம்!

அண்ணாமலை மற்றும் ஹெச் ராஜா மீது சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

ஐபிஎல் ரசிகர்களே உஷார்.!நூதன முறையில் பணத்தை திருடும் மர்ம கும்பல்.!

சமூக வலைதளங்களில் டிக்கெட் மோசடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய விருந்தாக அமைந்து வரும் ஐபிஎல் தொடரை பார்க்க…

9 hours ago

விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ளவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்கள் வட்டாரத்தை வைத்துள்ள விஜய், சினிமாவுக்கு முழுக்கு போட…

9 hours ago

This website uses cookies.