சென்னை: ‘ஊ சொல்வா, ஆலுமா டோலுமா’ போன்ற பாடல்களை சுட்டிக்காட்டி நமது தொன்மையான பண்பாட்டை பேணிக்காக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர் நயினார் நகேந்திரன் வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நகேந்திரன், மாணவர்களிடம் என்ன திறன் உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கேற்ப வேலைவாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அவர்களை வழி நடத்திட வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், என் மனைவியின் ஒரு சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு 1,700 ரூபாயை கட்டணமாக வாங்கிவிட்டார்கள் என்றும், தையல் கலையையெல்லாம் ஏன் ஒரு படிப்பாக கொண்டுவந்து, வேலைவாய்ப்பை உருவாக்கித் தரக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பெண்களின் உடை குறித்து பேசிய நயினார் நகேந்திரன், தற்போது பிரபலமாக உள்ள ‘ஊ சொல்லவா’ என்பதெல்லாம் என்ன பாடல் என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது போன்ற பாடல் வரிகளால் 50 வருடங்களுக்கு பின்னால் வருவோர், இதுதான் நம் கலாச்சாரமாக எண்ணிவிடமாட்டார்களா என்றும், இப்போது வரும் ‘ஊ சொல்றியா’ ‘ஆலுமா டோலுமா’ போன்ற பாடல் வரிகளை புரிந்து கொள்வதற்கு இந்தி படித்துவிட்டா அர்த்தம் தேட முடியும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், சேலை, ஜாக்கெட் தைப்பதற்கு இவ்வளவு ஆகின்றது என்பது நயினாருக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய நயினார் நாகேந்திரன், தனது மனைவி தைக்க கொடுத்த துணியை வாங்க செல்லும் போது தெரிந்து கொண்டதாக தெரிவித்தார். எனவே, இது போன்ற சூழலில், நமது தொன்மையான பண்பாட்டை நாம் போற்றிப் பேணிக்காக்க வேண்டும் என்றும் நயினார் நகேந்திரேன் வலியுறுத்தினார்.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.