கோவையில் இருந்து வரும் வருமானம் எங்கு செலவு செய்யப்படுகிறது..? நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வானதி சீனிவாசன் கேள்வி..!!
கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியதாவது :- கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து என்ன வசதி செய்ய முடியும் என்பதை ஆய்வு செய்தேன்.பிரசவத்துக்கு வரும் பெண்களுடன் வருபவர்களுக்கு தங்க சரியான இடம் இல்லை என சொல்லி இருக்கிறார்கள். அதை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்திருக்கிறோம்.
சில சமயங்களில் எழுதி கொடுக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை என்ற புகார் இருக்கின்றது. மருந்துகள் இருப்பில் இருக்க வேண்டும். தேவையானவற்றை வாங்கி வைக்க அதற்கு உரிய தீர்வு கிடைக்க வலியுறுத்தி உள்ளோம். மருத்துவமனை உணவகத்தில் சுகாதாரமற்ற சூழல் இருப்பதை பார்க்க முடிந்தது. பிளாஸ்டிக் பேப்பர், கப் போன்றவை பயன்படுத்தப்படுகின்றது. அதனை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளேன். உடல் நலத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் வழங்க வேண்டும் என சொல்லி இருக்கின்றேன்.
நிறைய நோயாளிகள் வரும் நிலையில், தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்படும். மருத்துவமனையில் பார்க்கிங் வசதிக்காக மாநில அரசை வலியுறுத்த இருக்கின்றோம். பிரசவத்துக்கு வரும் பெண்களிடம் பணம் கேட்கின்றனர் என்ற புகார் இருக்கின்றது. பணம் கொடுக்காதவர்களை சரியாக கவனிப்பதில்லை என்ற புகாரும் இருக்கிறது.
புகார் சொன்னால் அவர்களை செவிலியர்கள் மிரட்டுவதாகவும் இருக்கிறது. இது டீன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பணம் கேட்டு தொந்தரவு செய்தால் உடனடியாக புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் வழங்கப்படும் என டீன் சொல்லி இருக்கின்றார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடப்பதாக சொல்லி இருக்கிறார். நேற்று வெளிநடப்பு செய்ததால் நேரில் பார்க்க முடியவில்லை. அவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைக்கிறோம். 2004 -2014 வரை மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த பொழுது, எந்த அளவு நிதி வந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். அதைவிட பல மடங்கு பிரதமர் தமிழகத்திற்கு கொடுத்திருக்கிறார்.
தமிழகம் தனது வருமானத்திலிருந்து கொடுப்பதை வேறு மாநிலத்திற்கு கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்.
கோவை மற்றும் கொங்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் வருமானத்திற்கு மாநில அரசு எதை திரும்ப செய்கிறது? விவசாய மாவட்டத்தில இருந்து வருவதையும், தொழில் பகுதி மாவட்ட வருமானத்தையும் ஒன்றாக பார்க்க முடியாது.
அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகளை ஒரு அரசு செய்ய வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும்.
தமிழகத்தில் இருந்து வரும் நிதி மற்ற மாநிலத்திற்கு கொடுப்பது என்றால், கோவை வருமானத்தை எடுத்து முழுமையாக எங்கே செலவு செய்கின்றீர்கள் ? தமிழகம் முழுவதும் சேர்த்து செலவு செய்கின்றீர்களா? என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும், எனக் கேள்வி எழுப்பினார்.
கோவையில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, கேரளாவுக்குச் சென்று கணவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர்: கோவை…
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி பட டீசரை பார்த்த நடிகர் விஜய் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.…
தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டிய பாலா தமிழ் திரைப்பட உலகில் பழம்பெரும் நகைச்சுவை நடிகை பிந்து கோஷ்,அண்மைக் காலமாக கடுமையான…
தெலுங்கானாவில் காதலை கைவிடச் சொன்ன காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
தனுஷ்-அஜித் கூட்டணி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் பரவி வருகிறது அதாவது, நடிகர் அஜித்…
This website uses cookies.