இளைஞரணி மாநாட்டிற்காக திமுக வைத்த போஸ்டர்.. உதயநிதி முகத்தை மறைத்து போஸ்டர் ஒட்டிய பாஜகவினர் : பரபரப்பு புகார்!!
நெல்லை மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், இளைஞரணி துணை அமைப்பாளர் இனியன் என்ற செந்தில்முருகன் ஆகியோர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் சேலத்தில் நடைபெறும் இளைஞர் அணி மாநாட்டிற்காக பாளையங்கோட்டை சமாதானபுரம் தூத்துக்குடி பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புகைப்படங்கள் அடங்கிய விளம்பர பதாகை இளைஞரணி சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விளம்பர போர்டில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மாநில பொறுப்பாளர் பொன்பாலகணபதி, மாவட்ட பொறுப்பாளர் நீலமணியாதவ், மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் நெல்லை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சையா என்ற நபர் வேண்டும் என்றே திட்டமிட்டு கலவரத்தை தூண்டும் நோக்கில் போஸ்டரை ஒட்டியுள்ளார்.
எனவே பிச்சையா உள்ளிட்ட மேற்படி எதிரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இந்த மாநகர வழக்கறிஞர் அணி தலைவர் ஜாகீர்உஷேன், மத்திய மாவட்ட துணை அமைப்பாளர் மாலதி கண்ணன் உள்பட கலந்து கொண்டனர்.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
This website uses cookies.