Categories: தமிழகம்

வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி பாஜக புகார் மனு…

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறவும், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் வலியுறுத்தி பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், அதேபோல் பொதுமக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குமாரவேல் பாண்டியனிடம், பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயனி மற்றும் பாஜக நிர்வாகிகள் புகார் மனுவை அளித்தனர்.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட குமாரவேல் பாண்டியன், உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பான முறையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகாயினி பேசுகையில், “வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ,
35 வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பல்வேறு விதங்களில் அச்சுறுத்தி வருகின்றனர். மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஹோட்டல்களில் குற்றப்பின்னணி உள்ளவர்களும் தங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.எனவே அது போன்ற நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

அனைத்து பூத்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு மையங்களை கண்காணிக்க வேண்டும் எனவும், தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் எந்த ஒரு தனிநபரும் கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மக்கள் அமைதியான முறையில் வாக்களிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான குமரவேல் பாண்டியனிடம் புகார்களை தெரிவித்து இருப்பதாக அவர் கூறினார். புகார் அளிக்கும்போது பாஜக மாவட்ட தலைவர் தசரதன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

KavinKumar

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

7 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

7 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

8 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

10 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

10 hours ago

This website uses cookies.