நேற்றிலிருந்து திமுகவிற்கு சனிப்பெயர்ச்சி துவங்கிவிட்டதாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- அமைச்சர் பொன்முடி தண்டிக்கப்பட்டிருக்கிறார். திமுகவிற்கு தண்டனை என்ற முதல் விக்கெட் சரிந்துள்ளது.
நேற்றிலிருந்து திமுகவிற்கு சனிப்பெயர்ச்சி துவங்கிவிட்டது. பொன்முடிக்கு எதிரான வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தால் ஜாமீன் கிடைத்திருக்காது. அவர் நேரடியாக சிறை சென்று இருப்பார்.
ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒட்டுமொத்தமாக ஊழல் அரசு. அது தமிழகத்திற்கு பிடித்துள்ள பீடை, இதனை அகற்றுவது தான் தமிழக மக்களுக்கு விடிவு காலம். திமுக அமைச்சர்கள், எம்பிக்களின் ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்தால், தமிழகத்தின் 8 லட்சம் கோடி கடனை அடைத்து விடலாம்.
சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாஜக வெற்றிக்கு சனாதனம் பற்றி, உதயநிதி ஸ்டாலினின் பேச்சும் ஒரு காரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மரண அடி வாங்குவதற்கு உதயநிதி காரணமாக அமைவார்.
நிதீஷ்குமாரிடம் இந்தி தெரியாததால் ஸ்டாலின் மரண அடி வாங்கியுள்ளார். நீதிமன்றத்தில்அமைச்சர் பொன்முடி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். அகம்பாவ திமுக அரசாங்கம் விரைவில் அழியும், என்று தெரிவித்தார்.
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அதிரடி என்ட்ரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிரபல தெலுங்கு…
வாட் ப்ரோ..? கூல் சுரேஷின் சர்ச்சைக்குரிய உரை தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் கூல் சுரேஷ்,இவர் நடித்து ஃபேமஸ் ஆனதைவிட…
கடலூரில், மருமகள் மற்றும் பேத்திகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மாமனாரை மாமியாருடன் சேர்ந்து தீயிட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…
தமிழ் சினிமாவில் புதிய முயற்சி அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "குட் பேட் அக்லி" படம் வருகிற ஏப்ரல்…
சொத்து குறித்து மோகன் பாபு மற்றும் சௌந்தர்யா தொடர்பாக ஒரு தவறான செய்தி பரவி வருகிறது என நடிகையின் கணவர்…
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி! நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர்-2 திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக…
This website uses cookies.