கோவை ; மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்து வரும் திட்டங்களை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை தமிழக அரசு தடுப்பதாக பா.ஜ.க தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் காரமடையில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க சிறுபான்மை பிரிவு சார்பில் கிருஸ்துமஸ் விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் சங்கீதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபாண்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு கிருஸ்துவர்களுடன் இணைந்து இயேசு கிருஸ்துவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய, இப்ராகிம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு சிறுபான்மை மக்களின் மீது அக்கறை கொண்டு, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சிறுபான்மை மக்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை கொண்டு சேர்க்க கூட தமிழக காவல்துறை அனுமதிப்பதில்லை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பா.ஜ.க சார்பில் ஒரு தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்தினால் கூட கலவரம் ஏற்படும் என தங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை, என குற்றம்சாட்டினர்.
மேலும் கிருஸ்த்துமஸ் விழா நிகழ்ச்சியினை நடத்த பா.ஜா.க சார்பில் ஒரு பிளக்ஸ் பேனர் வைக்க கூட விடாமல் நீதிமன்ற உத்தரவு என தடுப்பதாகவும், ஆனால் முதல்வர் மற்றும் உதயநிதி,அமைச்சர்களை வரவேற்க மட்டும் நூற்றுக்கணக்கான பேனர்களை வைக்க அனுமதி அளிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.