பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு செல்லுங்கள் என பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் போதை ஒழிப்பு ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில செயலாளர் ஆனந்த பிரியா, தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராகிம் ஆகியோர் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக கண்ட கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், வேலூர் இப்ராஹிம் பேசுகையில், “பாரதப் பிரதமருக்கு கடுமையான அச்சுறுத்தல் உள்ளது. அதனால், பாதுகாப்பு வழங்க முடியாது என கூறுகிறது காவல்துறை. பிரதமருக்கே பாதுகாப்பு வழங்க முடியாவிட்டால் தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு செல்லுங்கள்.
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்துள்ளது. திமுகவை கண்டித்து பேசினால் காவல் துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர்.
திமுக ஆட்சி என்றால் காவல்துறை கைகள் கட்டப்பட்டு, உளவுத்துறை உறங்கி கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் ஆபத்தான சூழல் இருக்கிறது. திமுக ஆட்சியை தமிழகத்தை விட்டு துரத்தி அடிக்க வேண்டியது நமது கடமை என அவர் தெரிவித்தார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.