தஞ்சாவூர் : தேர் விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என்று பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தஞ்சையை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் முருகானந்தம் மாவட்ட தலைவர் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதிஷ் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீடு வீடாக நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் தேர் மின்சாரம் தாக்கி எரிந்த இடத்தையும் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய முருகானந்தம், இந்த விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் அப்பகுதியில் சாலை உயர்த்தப்பட்டு அகலப் படுத்தப்பட்டுள்ளது என்றும் திருவிழாக்கள் நடைபெறும் போது மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் இதில் அரசு அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.
இதற்கு அரசாங்கமும் காரணம் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணங்கள் அதிகப்படுத்த வேண்டும். அந்த குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாணவர்களின் கல்வி செலவு மேல் படிப்பிற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.