தஞ்சாவூர் : தேர் விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் என்று பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தஞ்சையை அடுத்த களிமேட்டில் நடைபெற்ற தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சி மாநில துணை தலைவர் முருகானந்தம் மாவட்ட தலைவர் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதிஷ் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை வீடு வீடாக நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் தேர் மின்சாரம் தாக்கி எரிந்த இடத்தையும் பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய முருகானந்தம், இந்த விபத்திற்கு அரசு அதிகாரிகள் தான் காரணம் அப்பகுதியில் சாலை உயர்த்தப்பட்டு அகலப் படுத்தப்பட்டுள்ளது என்றும் திருவிழாக்கள் நடைபெறும் போது மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் இதில் அரசு அதிகாரிகள் கவனக்குறைவாக இருந்துள்ளனர்.
இதற்கு அரசாங்கமும் காரணம் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணங்கள் அதிகப்படுத்த வேண்டும். அந்த குடும்பத்தில் படித்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மாணவர்களின் கல்வி செலவு மேல் படிப்பிற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.