கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்து கொண்ட நிலையில் பிரதமர் பெயரை பயன்படுத்தாததால் நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேறினர்.
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்க உள்ளது. இந்தநிலையில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி இன்று கோவை கொண்டுவரப்பட்டு கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, ராமசந்திரன், முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் செஸ் கிராண்ட் மாஸ்டர் சிறப்பு விருந்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்ட நிலையில், முன்னதாக முதல்வர் குறித்தும், இந்த போட்டி நடைபெற முதல்வரின் முயற்சிகள் குறித்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசினர்.
ஆனால் பிரதமர் குறித்து பேசவில்லை எனவும் பிரதமரின் பெயரை நிகழ்ச்சியில் பயன்படுத்தவில்லை எனவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி நிகழ்ச்சி துவங்கும் முன்னரே மேடையின் எதிர் புறத்தில் கோவை மாவட்ட பாஜகவின் மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் முன்வரிசையில் 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் அமர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்கியது முதல் சிறிது நேரம் வரை பிரதமர் பெயரை பயன்படுத்தாததால் பாஜகவினர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மௌனமாக வெளிநடப்பு செய்தனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
This website uses cookies.