Categories: தமிழகம்

பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைப்பு… வாக்கு சேகரித்து விட்டு வீடு திரும்பிய போது சோகம்

திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே பாஜக பெண் வேட்பாளரின் மண்டை உடைத்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தற்போது மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. பேரூராட்சியில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பேரூராட்சியில் உள்ள 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக , அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றம் என 4 பேர்கள் போட்டியிடுகின்றனர். இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக பொம்மனம்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மனைவி ராணி போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்றிரவு வாக்கு சேகரித்து விட்டு மீண்டும் தனது கணவருடன் காரில் வீட்டிற்கு திரும்பும் போது மர்ம நபர்கள் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் ராணியின் மண்டை உடைந்தது இதையடுத்து சிகிச்சைக்காக அம்மையநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினர்.

இரவு நேரத்தில் பெண் வேட்பாளர் மீது தாக்கிய மர்ம நபர்கள் மீது அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குப்பதிவு செய்து பொம்மனம்பட்டியை சேர்ந்த நிதிஷ்குமார் மற்றும் பிரபாகரன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் நிதிஷ்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார். தப்பி ஓடிய பிரபாகரனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

KavinKumar

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

12 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

13 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

14 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

14 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

15 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

15 hours ago

This website uses cookies.