Categories: தமிழகம்

அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்றார் பிரதமர்: கோவையில் பா.ஜ.க இளைஞரணி துணை தலைவர் பேச்சு!!

கோவை : பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் பேசியுள்ளார்.

பாஜக இளைஞரணியின் தேசிய துணைத்தலைவரும், கோவை மாவட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் தலைமையில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில், பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வகுமார், துணைத்தலைவர் சபாபதி, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் மற்றும் கோவை மாநகர வார்டுகளில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஏ.பி.முருகானந்தம் பேசியதாவது, அண்ணாமலை கடலில் கண்டெடுத்த முத்து என்று தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி புகழராம் சூட்டினார். தமிழக தலைவர்கள் நிர்வாகிகள் மீது அவர் மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளார்.

பா.ஜ.க.,வின் அடுத்த இலக்கு தமிழகம் தான். இது முடிவு செய்யப்பட்டுவிட்டது. அடுத்த 25 ஆண்டுகாலம் இந்தியாவில் ஆட்சியில் இருக்கப்போவது பா.ஜ.க தான்.

திமுக.,வை பற்றி நாம் பயப்பட தேவையில்லை. அண்ணாமலை எந்த ஒரு தொண்டனையும் விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் தூங்குவதே இரவு 2 மணிக்கு மேல் தான். தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார். நாம் அதற்கு பாடுபட வேண்டும். எந்த உதவி தேவைப்பட்டாலும் எங்களை அழைக்கலாம்.

மக்களை நாம் சென்றடைய வேண்டும். வார்டு வாரியாக இனி கூட்டங்கள் நடத்தப்படும்.திமுகவில் எத்தனை தலைவர்கள் வந்தாலும், பிரதமர் மோடி மற்றும் தமிழக தலைவர் அண்ணாமலை போல் இருக்க முடியாது.

இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற நிகழ்ச்சியை தமிழகத்தில் நாம் தொடங்கினோம். இது தற்போது தேசிய அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2006 ல் இருந்து தற்போது வரையிலான தேர்தலில் மாற்றுக்கட்சி வேட்பாளர் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் கட்சியின் சித்தாத்தங்கள் குறித்து பேச வேண்டும்.

தேமுதிக, அமுமுக, நாம் தமிழர் மற்றும் மநீம ஆகிய நான்கு கட்சிகளையும் நாம் பின்தள்ளியுள்ளோம். மொடக்குறிச்சி தொகுதியில் கங்கனம் கட்டிக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வைத்தோம். சுலபமாக வெற்றி பெறலாம் என்ற மமதையில் இருந்ததால் களப்பணியாற்றினோம்.

கோவை பா.ஜ.க.,வின் கோட்டை. ரத்தத்தை சிந்தி இக்கட்சியை இங்கு வளர்த்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

1 day ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

1 day ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

1 day ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

1 day ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

1 day ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

1 day ago

This website uses cookies.