Categories: தமிழகம்

2 நிமிடம் காத்திருக்க சொன்ன விவசாயி மீது கண்மூடித்தனமாக தாக்குதல் : காவலர் மற்றம் ராணுவ வீரர் மீது பாயுமா வழக்கு? போலீசார் விசாரணை!!

மதுரை : விவசாயியை தாக்கிய சிறைக்காவலர் மற்றும் இந்திய ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் பாண்டி (வயது 38). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக குடும்பத்துடன் ஆட்டோவில் வந்தார். அப்போது காளவாசல் திருமண மண்டப வாயிலில் பாண்டி குடும்பத்தினர் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினர்.

அப்போது ஆட்டோவின் பின்புறம் வந்த மோட்டார் சைக்கிளில் 2 பேர் இருந்தனர். அவர்கள் பலத்த சத்தத்துடன் ‘ஹாரன்’ அடித்தவாறு இருந்ததை அடுத்து பாண்டி ‘சிறிது நேரம் பொறுங்கள். நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி கொள்கிறோம்’ என்று தெரிவித்து உள்ளார்.

இதனிடையே 2 தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் ஆத்திரம் அடைந்த நிலையில் பாண்டியை சரமாரியாக தாக்கினர். இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது பாண்டியை தாக்கியது திருப்பரங்குன்றம், தேவி நகரை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 25) மற்றும் ஹார்விபட்டி பாலாஜி (வயது 25) என்பது தெரியவந்தது. இவர்களில் பார்த்தசாரதி மதுரை மத்திய ஜெயிலில் சிறைக்காவலராக வேலை பார்த்து வருகிறார். பாலாஜி ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்.எஸ்.காலனி போலீசார் பாண்டியை தாக்கியதாக பார்த்தசாரதி, பாலாஜி ஆகிய 2 பேரிடமும் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

7 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

8 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

9 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

10 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

10 hours ago

This website uses cookies.