Categories: தமிழகம்

சிவசேனா சின்னத்தை முடக்கியது பாஜகவின் சதி… தமிழகத்தில் அப்படி நடக்கலாம்.. அது மோடி கையில்தான் உள்ளது : காங்., எம்பி திருநாவுக்கரசர்!!

மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம், தமிழகத்திலும் இது போன்று மத்திய அரசு நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய அரசு நிதியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது. எந்த அளவுக்கு அந்த பணிகள் முடிவு பெற்றுள்ளது மீதமுள்ள பணிகளில் விரைவாக செய்வது எப்படி என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு பிரதமர் வருவது என்பது அவருடைய முடிவு யார் வேண்டுமானாலும் தேவர் நினைவிடத்திற்கு வரலாம்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் எந்த அணியையும் சாராமல் நடுநிலைமையாகத்தான் உள்ளனர். பிரச்சாரத்திற்கு வரும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது என்பது அந்தந்த நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அவர்களுடைய முடிவை பொருத்தது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிர்வாகிகள் செயல்படும்போது அவர்கள் வகிக்கக்கூடிய கட்சிப் பதவியை ராஜினாமா செய்து விட்டுதான் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் அதிகாரி உத்தரவிட்டதால் தான் சசி கரூர் பிரச்சாரத்திற்கு யாரும் செல்லவில்லை.

இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதல்வருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போன்று பொதுச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர் மற்றும் கனிமொழிக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சித் தலைவராக அவர் பொதுக்குழுவில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு ஒரு சில ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறார்
அதற்கு அவருக்கு முழு உரிமை உள்ளது. அதை ஊடகங்கள் தான் பெரிதாக்கிவிட்டன.

மத்திய அரசு இந்தியை மீண்டும் திணிக்க முயற்சி செய்வது கண்டனத்துக்குரியது
இந்தி திணிப்பு தமிழகத்தில் ஒரு நாளும் வெற்றி பெறாது. அவ்வாறு அது முயற்சி செய்தால் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்

மகாராஷ்டிராவில் சிவசேனா சின்னம் முடக்கப்பட்டது பிஜேபியின் சதியாக இருக்கலாம். தமிழகத்திலும் இது போன்று மோடி மற்றும் அமித்ஷா நினைத்தால் சின்னம் முடக்கப்படலாம்.

சட்டசபையில் அதிமுக இருக்கை ஒதுக்குவது தொடர்பாக சபாநாயகர் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதை அறிய நானும் ஆவலாக உள்ளேன். திமுக எம்பி ஆ ராசா மீது சிபிஐ சொத்து குவிப்பு வழக்கில் குற்ற பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது அதை கண்டிப்பாக ராஜா எதிர் கொள்வார். இவ்வாறு அவர் கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

55 minutes ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

2 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

4 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

5 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

5 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

6 hours ago

This website uses cookies.