கொள்ளிடம் ஆறு அருகே பாதி எரிந்த நிலையில் பெண் சடலம் : போலீசார் விசாரணையில் பகீர் தகவல்..!!!
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் 10 வது கட்டை பகுதியில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் தலை மற்றும் கை எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் குறித்து விசாரணை செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்குள்ள தடயங்களை சேகரித்தனர்.
பின்னர் பெண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் கொலை செய்த பெண் யார்?
எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இங்கு வந்தார்? எதற்காக எரித்து கொலை செய்தனர்?பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்..
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.