சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் இணை ஆணையரின் கார் ஓட்டுநர் அந்த கோயில் திருமண மண்டபத்தில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இணை ஆணையராக பணியாற்றி வருபவர் காவேரி. இவருக்கு கார் ஓட்டுநராக ஜெயச்சந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் வி.என். நகரில் உள்ளது. அங்கு நேற்று இரவு ஜெயச்சந்திரன் மர்மமான முறையில் தூக்கில் சடலமாக கிடந்துள்ளார். அப்போது அங்கு அருகே இருந்த சக ஊழியர்கள் மற்றும் ஜெயச்சந்திரன் மனைவியும் சேர்ந்து ஜெயச்சந்திரனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயச்சந்திரன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. இதன் பிறகு மயிலாப்பூர் போலீசார் தற்கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக ஜெயச்சந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.