சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சென்னை அரும்பாக்கத்தில் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் 3ஆம் வகுப்பு பள்ளி மாணவன் நடந்து சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த ஜங்சன் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையும் படியுங்க: முதலாளிக்கு குளிர்பானத்தில் விஷம்… துரோகம் செய்த சிறுவன் : அதிர்ச்சி சம்பவம்!
வெள்ளத்தில் இருந்ததால் அறியாத சிறுவன் நடந்து சென்ற போது திடீரென மின்சாரம் தாக்கி உயயிருக்கு போராடினான். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் சிறுவனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றினார்.
இது தொடர்பான வீடியே வைரலான நிலையில், சிறுவனை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க இளைஞருக்கு நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து இளைஞர் கண்ணன் கூறியதாவது, சிறுவனை காப்பாற்றும் போது மின்சாரம் என்னையும் தாக்கியது, சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் உயிரை பணயம் வைத்தேன் என கூறினார்.
இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், ரியல் ஹீரோ கண்ணன் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…
வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…
வடிவேலுவின் கம் பேக் கோலிவுட்டில் டாப் காமெடி நடிகராக வலம் வரும் வடிவேலு, கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில்…
This website uses cookies.