தமிழகம்

காதலியோடு பைக்கில் சென்ற நபர்.. ரத்தக்காயங்களோடு போராட்டம் : கோவையில் கொடூரம்!

கோவை மாவட்டம் வேடப்பட்டி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (27). இவர் நேற்று தன்னுடைய நண்பர் குரு பிரசாத்துடன் இணைந்து, சிங்காநல்லூர் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் அமர்ந்து மது குடித்து உள்ளனர்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஜோடி, இவர்கள் அமர்ந்து இருந்த இடத்தின் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்று உள்ளனர்.

சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த அந்த ஜோடி, வண்டியின் மேல் வைத்து சென்ற ஹெல்மெட்டை காணவில்லை என்று சதீஷ்குமார் மற்றும் குரு பிரசாத்திடம் கேட்டதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் தாங்கள் எடுக்கவில்லை என கூறி உள்ளனர்.

இதையும் படியுங்க : நடுரோட்டில் கல்லூரி மாணவிக்கு முத்தம் கொடுத்த வாலிபர்.. கோவையில் சினிமாவை மிஞ்சிய ஷாக் சம்பவம்!

இவர்களும் அந்த ஜோடியை விசாரித்த போது அந்த ஆணின் பெயர் விக்னேஷ் என்பதும் அந்தப் பெண்ணின் பெயர் சௌந்தர்யா என்பதும் தெரிய வந்தது. மீண்டும் அவர்கள் ஹெல்மட்டை எடுக்கவில்லை என மரியாதையாக கூறி உள்ளனர்.

ஆனால் விக்னேஷ் என்னுடைய ஹெல்மெட்டை கொடுங்கடா குடிகார நாய்களா என்று கூறி தகாத வார்த்தைகளால் பேசி, தன்னுடைய பாக்கெட்டில் வைத்து இருந்த கத்தியை எடுத்து சதீஷின் தோள்பட்டை, வலது முதுகு தலை மற்றும் பல இடங்களில் குத்தி இருக்கிறார்.

இதைக் கண்ட வழியே வந்த பார்த்திபன் மற்றும் கௌதம் ஆகியோர் சண்டையை தடுத்து நிறுத்தி, சதீஷை 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு இருந்து விக்னேஷ் தப்பிய ஓடியதாக தெரிகிறது.

இதுகுறித்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் சதீஷிடம் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் புகார் பெற்று விசாரணை மேற்கொண்டதில் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ் என்பதும் தெரிய வந்தது.

விக்னேஷை கைது செய்து அவரிடம் இருந்து கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கோவையில் காதலியோடு சென்ற நபரின் கொடூரச் செயலால் சதீஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

7 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

9 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

9 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

10 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

10 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

11 hours ago

This website uses cookies.