தமிழகம்

அடிக்கடி சந்தித்து உல்லாசம்.. கர்ப்பமான காதலியை ஏமாற்றிய காதலன் : தகாத வார்த்தையில் பேசிய போலீஸ்..!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலியை ஏமாற்றிய காதலன்.. திருமணம் செய்வதாக கூறி எஸ்கேப் ஆனவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை

திருச்சி பட்டவர்த் ரோடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வசித்து வருபவர் கிருத்திகா. இவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

பொன்னையன் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தனியே சந்தித்து வந்த நிலையில் கிருத்திகா கர்ப்பம் ஆகியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளும்படி கிருத்திகா கேட்ட போது இப்போது குழந்தை வேண்டாம். வீட்டிற்கு தெரிந்தால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். ஆகையால் கர்ப்பத்தை கலைத்துவிடு என கூறி மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் காதலனை நம்பி கர்ப்பத்தை கலைத்து உள்ளார்.

பின்னர் திருமணத்தை தவிர்த்ததால் கிருத்திகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் . மீண்டும் சமரசம் பேசியதால் அப்போது புகார் அளிப்பதை நிறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் முற்றிலுமாக தொடர்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து தான் ஏமாந்ததை அறிந்த கிருத்திகா கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி தபால் மூலம் கோட்டை காவல் நிலையத்தில் புகாட் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மறுநாள் 16ம் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அலைக்கழிக்கப்பட்டார். பின்னர் ஒரு வழியாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இது பற்றி அறிந்த காதலன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். ஆனால் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

முன் ஜாமீன் தள்ளுபடி செய்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்மணி கூறும் போது, தற்போதைய மத்திய அரசின் பி என் எஸ் எஸ் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், தகாத வார்த்தையால் திட்டிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து காதலனை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பொன்னையனின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதிமுகவில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்பதால் அரசியல் தலையிட காரணமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் தெரிவிக்கிறார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.