தமிழகம்

அடிக்கடி சந்தித்து உல்லாசம்.. கர்ப்பமான காதலியை ஏமாற்றிய காதலன் : தகாத வார்த்தையில் பேசிய போலீஸ்..!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலியை ஏமாற்றிய காதலன்.. திருமணம் செய்வதாக கூறி எஸ்கேப் ஆனவர் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறை

திருச்சி பட்டவர்த் ரோடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வசித்து வருபவர் கிருத்திகா. இவர் திருச்சி ஜங்ஷன் பகுதியில் தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

பொன்னையன் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்படுகிறது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் தனியே சந்தித்து வந்த நிலையில் கிருத்திகா கர்ப்பம் ஆகியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளும்படி கிருத்திகா கேட்ட போது இப்போது குழந்தை வேண்டாம். வீட்டிற்கு தெரிந்தால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். ஆகையால் கர்ப்பத்தை கலைத்துவிடு என கூறி மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் காதலனை நம்பி கர்ப்பத்தை கலைத்து உள்ளார்.

பின்னர் திருமணத்தை தவிர்த்ததால் கிருத்திகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் . மீண்டும் சமரசம் பேசியதால் அப்போது புகார் அளிப்பதை நிறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் முற்றிலுமாக தொடர்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து தான் ஏமாந்ததை அறிந்த கிருத்திகா கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி தபால் மூலம் கோட்டை காவல் நிலையத்தில் புகாட் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மறுநாள் 16ம் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அலைக்கழிக்கப்பட்டார். பின்னர் ஒரு வழியாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இது பற்றி அறிந்த காதலன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். ஆனால் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

முன் ஜாமீன் தள்ளுபடி செய்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்மணி கூறும் போது, தற்போதைய மத்திய அரசின் பி என் எஸ் எஸ் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், தகாத வார்த்தையால் திட்டிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து காதலனை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பொன்னையனின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதிமுகவில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்பதால் அரசியல் தலையிட காரணமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் தெரிவிக்கிறார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

9 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

9 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

10 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

10 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

10 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

11 hours ago

This website uses cookies.