Categories: தமிழகம்

தனிமையில் சந்தித்து சிறுமியுடன் காதலை வளர்த்த இளைஞர் : காதலுக்கு எதிர்ப்பு வலுத்ததால் சிறுமியை கொன்று காதலன் தற்கொலை!!!

வேலூர் : காதலை ஏற்றுக்கொள்ளாததால் 16 வயது சிறுமியை கொலை செய்த இளைஞர் தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் சவுத் அவென்யூ பகுதியை சேர்ந்தவர்கள் பாரதிதாசன் தீபலட்சுமி தம்பதியர். இவர்களது 16 வயதுடைய மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாரதிதாசன், தீபலட்சுமி இருவரும் ஷூ தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். தீபலட்சுமியின் தாய் வீடான கருகம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய ராம்குமார். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.

கருகம்புத்தூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி 16 வயது சிறுமி சென்று வந்த போது ராம்குமார் உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தாய் தந்தை இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர் ராம்குமார் சிறுமியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெற்றோர்கள் பாரதிதாசன் மற்றும் தீபலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர். ராம்குமாரின் வீடு தேடிச்சென்று அவர்களது பெற்றோரிடம் எச்சரித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பிய போது வீட்டில் மகள் தரையில் சடலமாகவும் மற்றும் ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த சத்துவாச்சாரி காவல் நிலைய காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

KavinKumar

Recent Posts

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

13 hours ago

ஹாரர் படத்தில் சிவகார்த்திகேயனா? புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்…

பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…

15 hours ago

கோவைக்கு செங்கோட்டையன் திடீர் வருகை… சரமாரி கேள்வி எழுப்பிய நிருபர்கள் : மவுனம் கலையுமா?!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…

15 hours ago

தனது பெயரை மூன்றேழுத்தாக சுருக்கிக்கொண்ட கௌதம் கார்த்திக்? ஏன் இப்படி?

திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…

15 hours ago

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

16 hours ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

17 hours ago

This website uses cookies.