வேலூர் : காதலை ஏற்றுக்கொள்ளாததால் 16 வயது சிறுமியை கொலை செய்த இளைஞர் தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் சவுத் அவென்யூ பகுதியை சேர்ந்தவர்கள் பாரதிதாசன் தீபலட்சுமி தம்பதியர். இவர்களது 16 வயதுடைய மகள் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். பாரதிதாசன், தீபலட்சுமி இருவரும் ஷூ தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர். தீபலட்சுமியின் தாய் வீடான கருகம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய ராம்குமார். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.
கருகம்புத்தூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு அடிக்கடி 16 வயது சிறுமி சென்று வந்த போது ராம்குமார் உடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தாய் தந்தை இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர் ராம்குமார் சிறுமியின் வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெற்றோர்கள் பாரதிதாசன் மற்றும் தீபலட்சுமியிடம் தெரிவித்துள்ளனர். ராம்குமாரின் வீடு தேடிச்சென்று அவர்களது பெற்றோரிடம் எச்சரித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்ற நிலையில் மாலை வீடு திரும்பிய போது வீட்டில் மகள் தரையில் சடலமாகவும் மற்றும் ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போயுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த சத்துவாச்சாரி காவல் நிலைய காவலர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களுடன் ஒரு பாட்டில் ஆவது தலையை காட்டி விட வேண்டும் என சக நடிகைகள் விரும்புவது…
This website uses cookies.