Categories: தமிழகம்

குமரி முதல் காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிள் பேரணி: கோவை திரும்பிய பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி!!

கோவை: மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என குமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று கோவை திரும்பிய பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி தெரிவித்துள்ளார்.

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தா கல்பா பவுண்டேசன் நிறுவன தலைவரும் ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரமத்தின் பிரம்மரிஷியும் ஆன ஈஸ்வரன் குருஜி அழிந்து வரும் பறவை இனங்களை காக்க வலியுறுத்தி கடந்த மாதம் 21ம் தேதி சிட்டு குருவி தினத்தை முன்னிட்டு ஸேவ் பேர்ட்ஸ் யுவர் செல்ப் ( SAVE BIRDS YOUR SELF) எனும் தலைப்பில் குமரியில் துவங்கி காஷ்மீர் வரை சுமார் 4000 கிலோ மீட்டர் இரு சக்கர பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து கோவை திரும்பிய குருஜி ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,பறவைகளின் புகழிடமாக உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்குச் சென்று, அந்த கிராம மக்களை கவுரவித்து, தமது பயணத்தை துவங்கியதாக கூறிய அவர்,மண்வளம், மரங்களை பாதுகாப்பது போன்றவகளை காட்டிலும் மனித குலம் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழியாமல் பாதுகாப்பதே தற்போதைய முக்கிய பணியாக செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

தமது பயணத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும், கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் தமது பேரணியை நிறைவு செய்ததாக கூறிய அவர்,குறிப்பாக தமது பயணத்தின் நோக்கத்தை செல்லும் இடங்களில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் இளம் தலைமுறையினரிடம் எடுத்து கூறியதாகவும் பறவைகளின் தன்மையை மனித குலம் அறிந்து கொள்வதற்காக இந்த பேரணியை நடத்தியாக குறிப்பிட்டார்.

மேலும் தமது பயணம் முழுவதும் சாலை மார்க்கமாகவே இருந்ததாக குறிப்பிட்ட அவர்,இந்தியா முழுவதும் தரமான சாலைகளில் பயணம் மேற்கொண்டதாகவும்,இந்த நேரத்தில் மத்திய அரசிற்கு தமது நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

தமது பயணத்தின் நடுவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்தித்து தமது பயணத்தின் நோக்கம் குறித்து கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்றுவதே முக்கிய தீர்வு என உறுதிபட தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

27 minutes ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

33 minutes ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

2 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

2 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

4 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

6 hours ago

This website uses cookies.