Categories: தமிழகம்

குமரி முதல் காஷ்மீர் வரை மோட்டார் சைக்கிள் பேரணி: கோவை திரும்பிய பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி!!

கோவை: மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என குமரி முதல் காஷ்மீர் வரை இரு சக்கர வாகனத்தில் சென்று கோவை திரும்பிய பிரம்மரிஷி ஈஸ்வரன் குருஜி தெரிவித்துள்ளார்.

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தா கல்பா பவுண்டேசன் நிறுவன தலைவரும் ஸ்ரீ ஆனந்த வேதாஸ்ரமத்தின் பிரம்மரிஷியும் ஆன ஈஸ்வரன் குருஜி அழிந்து வரும் பறவை இனங்களை காக்க வலியுறுத்தி கடந்த மாதம் 21ம் தேதி சிட்டு குருவி தினத்தை முன்னிட்டு ஸேவ் பேர்ட்ஸ் யுவர் செல்ப் ( SAVE BIRDS YOUR SELF) எனும் தலைப்பில் குமரியில் துவங்கி காஷ்மீர் வரை சுமார் 4000 கிலோ மீட்டர் இரு சக்கர பயணம் மேற்கொண்டார்.

தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்து கோவை திரும்பிய குருஜி ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,பறவைகளின் புகழிடமாக உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்குச் சென்று, அந்த கிராம மக்களை கவுரவித்து, தமது பயணத்தை துவங்கியதாக கூறிய அவர்,மண்வளம், மரங்களை பாதுகாப்பது போன்றவகளை காட்டிலும் மனித குலம் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழியாமல் பாதுகாப்பதே தற்போதைய முக்கிய பணியாக செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

தமது பயணத்திற்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும், கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் மற்றும் இந்திய பாகிஸ்தான் எல்லையான வாகாவில் தமது பேரணியை நிறைவு செய்ததாக கூறிய அவர்,குறிப்பாக தமது பயணத்தின் நோக்கத்தை செல்லும் இடங்களில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் இளம் தலைமுறையினரிடம் எடுத்து கூறியதாகவும் பறவைகளின் தன்மையை மனித குலம் அறிந்து கொள்வதற்காக இந்த பேரணியை நடத்தியாக குறிப்பிட்டார்.

மேலும் தமது பயணம் முழுவதும் சாலை மார்க்கமாகவே இருந்ததாக குறிப்பிட்ட அவர்,இந்தியா முழுவதும் தரமான சாலைகளில் பயணம் மேற்கொண்டதாகவும்,இந்த நேரத்தில் மத்திய அரசிற்கு தமது நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

தமது பயணத்தின் நடுவே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்தித்து தமது பயணத்தின் நோக்கம் குறித்து கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், மண் வளத்தை காப்பாற்ற முதலில் பறவைகள் மற்றும் விலங்கினங்களை அழிவு பாதையில் இருந்து காப்பாற்றுவதே முக்கிய தீர்வு என உறுதிபட தெரிவித்தார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!

பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…

2 hours ago

யார் அந்த சூப்பர் முதல்வர்? காரசாரமான மக்களவை.. ஸ்டாலினுக்கு அண்ணாமலை 3 கேள்விகள்!

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…

3 hours ago

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

5 hours ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

6 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

6 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

7 hours ago

This website uses cookies.