விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வேல்முருகன் (பொறுப்பு) தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் செப்டம்பர் 5 மாலை 4 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத 66,000 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து புகார் எழுந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில் பணம் சிக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அரகண்டநல்லுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கண்ட திடீர் சோதனையில் அங்கு இருந்த இடைத்தரகர்கள் மற்றும் சார்பதிவாளர் அய்யன்னார் (பொறுப்பு) ஆகியோரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று மாதத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் வானூர் திண்டிவனம் அரகண்டநல்லூர் திண்டிவனம் வானூர் மூன்று சார் பதிவாளர் அலுவலகத்திலும் கண்டாச்சிபுரம் மின்வாரிய அலுவலகம் மற்றும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் என ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.