கடலூர் அருகே மின் கம்பி உரசுவதால் செங்கல்லை கட்டி வைத்த மின்துறை அதிகாரிகளின் செயல் பேசு பொருளாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வாழைக்கொல்லை கிராமத்தில் சுடுகாடு அருகில் வயல்களில் உயரழுத்த மின்கம்பி மற்றும் குறைந்தழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில் உயரழுத்த மின்கம்பி செல்லும் வழியில் அதன் கீழாக செல்லும் தாழ்வழுத்த மின் கம்பியானது ஒன்றையொன்று உரசிடும் விதத்தில் செல்கிறது.
இந்த இரண்டு மின் கம்பிகளும் ஒன்றை ஒன்று உரசி கொண்டால் மிகப் பரிய விபத்து மற்றும் மின் கம்பிகள் அறுந்து வயலில் விழுந்துவிடும் அபாய நிலையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் விவசாயிகள் இந்த மின்கம்பிகளை மாற்றி புதிய மின் கம்பிகளை சரியான உயரத்தில் அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆனால் மின்வாரியத்துறை அதிகாரிகளோ அதனைக் கேட்டுக் கொண்டதோடு சரி, அதன்படி செய்யாமல் தங்களுக்கு வழங்கப்பட்ட புதுவிதமான பயிற்சியாக மின்வாரியத் துறை அதிகாரிகள் மின்கம்பிகள் ஒன்றை ஒன்று உரசாமல் இருக்க செங்கல்லை கட்டி தொங்க விட்டனர்.
மின்கம்பியின் மேல் செங்கல் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதால் மின் கம்பி அறுந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். செங்கல் கட்டி தொங்கவிடப்பட்ட மின்கம்பிகள் பழைய கம்பிகளாக இருந்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வயலில் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
மின்வாரியத்துறை அதிகாரிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாட்டை கண்டு வியந்த விவசாயிகள், மனம் நொந்து வேதனையடைந்து வருகின்றனர்.
உடனடியாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்கம்பிகளை அதற்குரிய அளவில் பொருத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.