Categories: தமிழகம்

மணப்பெண்ணை அறைந்த மணமகன்…திருமணத்தை நிறுத்திய பெண்: திடீர் மாப்பிள்ளை ஆன அத்தை மகன்…பண்டிருட்டியில் கலாட்டா கல்யாணம்..!!

பண்ருட்டி: மணமகன் கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண், அதேமேடையில் அத்தை மகனை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பொறியியல் பட்டதாரிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்து. இவர்கள் இருவருக்கும் பண்ருட்டியில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

அதில் மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன் ஒருபகுதியாக பாடல் ஒன்றுக்கு மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர்.

அப்போது மணமகளின் உறவினர் ஒருவரும் மேடையில் வந்து நடனமாடியுள்ளார். இதன் காரணமாக மணமகன் மிகவும் எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. அப்போது அவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஆத்திரத்தில் மணமகளின் கன்னத்தில் அறைந்துள்ளார். அனைவரும் முன்பாக திடீரென மணமகன் அப்பெண்ணை அடித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

இதைத் தொடர்ந்து மணமகள் மிகவும் வருத்தத்துடன் அழுதுள்ளார். மேலும் அப்பெண், “இவர் திருமணத்திற்கு முன்பாகவே இப்படி நடந்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு எப்படி இருப்பார் என்று தெரியாது. ஆகவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள்” என்று அழுது கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து மணமகளை இரு வீட்டினரும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது மணமகளை அறைந்தற்காக மணமகன் அப்பெண்ணின் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் மணமகள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணத்தை நிறுத்தும் முடிவை இரு குடும்பத்தினரும் எடுத்துள்ளனர்.

அதன்பின்னர் மணமகளின் குடும்பத்தினர் உறவினர்களுடன் கலந்து பேசி அவரது அத்தை மகனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். திருமண வரவேற்பில் மணமகளை மணமகன் அறைந்ததால் அந்த திருமணம் நின்றுபோனதும், மணமகளின் சமயோசிதமான முடிவும் அங்கு மகிழ்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில், மணமகன் வீட்டார் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..

கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

6 minutes ago

திரைக்கு வந்து சில ‘நாட்களே’ ஆன… சன் டிவியிடம் சரண்டர்… சிக்கித் தவிக்கும் ஜனநாயகன்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…

28 minutes ago

திமுக கரை வேட்டி கட்டிக்கிட்டு பொட்டு வைக்காதீங்க.. யாரு சங்கினே தெரியாது : சர்ச்சை கிளப்பிய ஆ. ராசா!

நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…

53 minutes ago

சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…

சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…

56 minutes ago

சொன்னதை செய்த அண்ணாமலை.. மேலிடம் கொடுத்த ஜாக்பாட் : 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…

1 hour ago

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஆணுறுப்பை… மனைவியின் கொடூரம் : ஷாக் வீடியோ!

கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…

2 hours ago

This website uses cookies.