மளிகை கடையின் ஷட்டரை உடைத்து பணம், பொருட்களை திருட்டு போன சம்பவம் தொடர்பாக, கோவையில் மர்ம நபர்களை தேடி வரும் காவல் துறையினர்.
கோவை சிவானந்தா காலனி சாஸ்திரி வீதியை சேர்ந்தவர் மணிக்குமார். இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் முடித்து விட்டு மணிக்குமார் தனது மளிகை கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
இன்று காலை கடையை திறக்க வந்த போது முன்பக்க ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் ஷட்டரைத் திறந்து உள்ளே பார்த்த போது கடையில் வைத்து இருந்த சுமார் ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து, மணிக்குமார் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் அளித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பதிவான கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கடையில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நள்ளிரவில் மளிகை கடையின் கதவை உடைத்து மர்ம நபர் கைவரிசை காட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.