தமிழகம்

சொந்த தம்பியைக் கொன்ற நபருடன் அக்கா கள்ள உறவு.. நடுரோட்டில் தீர்க்கப்பட்ட முன்பகை!

கோவையில், தம்பியைக் கொலை செய்த அக்காவுடன் தகாத நபரில் இருந்தவரை அண்ணன் மற்றும் மைத்துனர் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் முருகன் (37). தேவிகாவின் தம்பி ஜெகன்ராஜ். இந்த நிலையில், தேவிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (35) என்பவர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து உள்ளது.

பின்னர், இது குடும்பத்தினருக்கு தெரிய வந்து உள்ளது. இதனை தேவிகாவின் தம்பி ஜெகன் ராஜ் தட்டிக் கேட்டு உள்ளார். அதற்காக, மதன்ராஜ், தேவிகாவின் தம்பி ஜெகன் ராஜை கடந்த 2023ஆம் ஆண்டு கொலை செய்து உள்ளார். இதன் பேரில் கைதான மதன்ராஜ், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்,

இதனையடுத்து, மீண்டும் தேவிகா உடன் மதன்ராஜ் உறவில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், கொலையுண்ட ஜெகன் ராஜின் அண்ணன் சித்திரை குமார் (38) மற்றும் தேவிகாவின் கணவர் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து மதன்ராஜை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதன்படி, நேற்று மாலை 4 மணியளவில், தொண்டாமுத்தூர் அருகே உள்ள குரும்பப்பாளையம் மருதப்பர் நகர் பகுதியில், மதன்ராஜ் இருசக்கர வாகனத்தில் வந்து உள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த சித்திரை குமார் மற்றும் முருகன் இருவரும், தாங்கள் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு மதன்ராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில், மதன் ராஜின் இடது தாடை, இடது புருவம் மற்றும் வலது முன்கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மதன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் ஓடி வந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளனர்.

பின்னர், இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சிறார் கேங்ஸ்டராக மாற இதுதான் காரணம்.. கோர்ட்டே சொன்ன அதிரடி கருத்து!

அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், வெட்டிவிட்டு தப்பி ஓடிய சித்திரை குமார் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் இருகூர் பகுதியில் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

8 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

8 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

8 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

9 hours ago

This website uses cookies.