தமிழகம்

சொந்த தம்பியைக் கொன்ற நபருடன் அக்கா கள்ள உறவு.. நடுரோட்டில் தீர்க்கப்பட்ட முன்பகை!

கோவையில், தம்பியைக் கொலை செய்த அக்காவுடன் தகாத நபரில் இருந்தவரை அண்ணன் மற்றும் மைத்துனர் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவிகா. இவரது கணவர் முருகன் (37). தேவிகாவின் தம்பி ஜெகன்ராஜ். இந்த நிலையில், தேவிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் (35) என்பவர் உடன் திருமணத்துக்கு மீறிய உறவு இருந்து உள்ளது.

பின்னர், இது குடும்பத்தினருக்கு தெரிய வந்து உள்ளது. இதனை தேவிகாவின் தம்பி ஜெகன் ராஜ் தட்டிக் கேட்டு உள்ளார். அதற்காக, மதன்ராஜ், தேவிகாவின் தம்பி ஜெகன் ராஜை கடந்த 2023ஆம் ஆண்டு கொலை செய்து உள்ளார். இதன் பேரில் கைதான மதன்ராஜ், சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்து உள்ளார்,

இதனையடுத்து, மீண்டும் தேவிகா உடன் மதன்ராஜ் உறவில் இருந்து வந்து உள்ளார். இந்த நிலையில், கொலையுண்ட ஜெகன் ராஜின் அண்ணன் சித்திரை குமார் (38) மற்றும் தேவிகாவின் கணவர் முருகன் ஆகிய இருவரும் சேர்ந்து மதன்ராஜை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இதன்படி, நேற்று மாலை 4 மணியளவில், தொண்டாமுத்தூர் அருகே உள்ள குரும்பப்பாளையம் மருதப்பர் நகர் பகுதியில், மதன்ராஜ் இருசக்கர வாகனத்தில் வந்து உள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த சித்திரை குமார் மற்றும் முருகன் இருவரும், தாங்கள் கொண்டு வந்த கத்தியைக் கொண்டு மதன்ராஜை சரமாரியாக வெட்டி உள்ளனர்.

இதில், மதன் ராஜின் இடது தாடை, இடது புருவம் மற்றும் வலது முன்கை ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மதன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்த பொதுமக்கள் ஓடி வந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருவரும் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளனர்.

பின்னர், இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். இதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மதன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சிறார் கேங்ஸ்டராக மாற இதுதான் காரணம்.. கோர்ட்டே சொன்ன அதிரடி கருத்து!

அவர் அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், வெட்டிவிட்டு தப்பி ஓடிய சித்திரை குமார் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் இருகூர் பகுதியில் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

15 minutes ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

17 minutes ago

விடுமுறை நாளில் சென்சார் பண்ண வேண்டிய அவசியம் என்ன? எம்புரான் விவகாரத்தின் உண்மை பின்னணி இதுதான்- ஓபனாக போட்டுடைத்த பிரபலம்

மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…

1 hour ago

சீரியல் நடிகை கொலை வழக்கில் டுவிஸ்ட்.. உல்லாசமாக இருந்த கோவில் பூசாரிக்கு மரண தண்டனை!

சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…

1 hour ago

சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!

சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…

2 hours ago

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு.. முக்கிய தலைவர் கடும் குற்றச்சாட்டு!

சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…

2 hours ago

This website uses cookies.