Categories: தமிழகம்

மாமனாவது… மச்சானாவது : நிலத் தகராறில் அக்கா மற்றும் அவரது கணவரை பட்டாகத்தியால் வெட்டிய தம்பி… வைரலாகும் ஷாக் வீடியோ!!

விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள ஆயந்தூர் கிராமத்தை சார்ந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது சகோதரரான அரிகிருஷ்ணன் ஆகியோருக்கு நிலத்திற்கு அருகிலுள்ள ஓடையில் மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் அரிகிருஷ்ணணை அவரது சகோதரியின் கணவரான அய்யனார் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் பாதிப்படைந்த அரிகிருஷ்ணன் 15 ஆம் தேதி மாலை ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கையில் பட்டா கத்தியுடன் வந்து சகோதரி ராஜசுலோச்சனா மற்றும் மாமன் அய்யனாரை துரத்தி துரத்தி பட்டா கத்தியால் கழுத்து கை தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.

இதனால் காயமடைந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது கணவர் அய்யனார் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட அரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரி மற்றும் அவரது கணவரை அய்யனார் பட்டா கத்தியால் வெட்டியுள்ளார். சகோதரி மற்றும் சகோதரியின் கணவரை சகோதரன் பட்டா கத்தியால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விழுப்புரம் : ஆயந்தூரில் நிலத்தகராறில் சகோதரி மற்றும் கணவரை சகோதரியின் தம்பி பட்டா கத்தியால் வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் காணை அருகேயுள்ள ஆயந்தூர் கிராமத்தை சார்ந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது சகோதரரான அரிகிருஷ்ணன் ஆகியோருக்கு நிலத்திற்கு அருகிலுள்ள ஓடையில் மண் எடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறில் அரிகிருஷ்ணணை அவரது சகோதரியின் கணவரான அய்யனார் மற்றும் அவரது மகன் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். இதனால் பாதிப்படைந்த அரிகிருஷ்ணன் 15 ஆம் தேதி மாலை ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே கையில் பட்டா கத்தியுடன் வந்து சகோதரி ராஜசுலோச்சனா மற்றும் மாமன் அய்யனாரை துரத்தி துரத்தி பட்டா கத்தியால் கழுத்து கை தலை பகுதிகளில் வெட்டியுள்ளார்.

இதனால் காயமடைந்த ராஜசுலோச்சனா மற்றும் அவரது கணவர் அய்யனார் ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு அருகிலுள்ள முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காணை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு கொலை முயற்சியில் ஈடுபட்ட அரிகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆயந்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரி மற்றும் அவரது கணவரை அய்யனார் பட்டா கத்தியால் வெட்டியுள்ளார். சகோதரி மற்றும் சகோதரியின் கணவரை சகோதரன் பட்டா கத்தியால் வெட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் போல பாஜக பகல் கனவு காண்கிறது.. ஜெயக்குமார் சரமாரி பேச்சு!

2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…

43 minutes ago

வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!

சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…

1 hour ago

’இனி எந்த போராட்டமும் இல்லை’.. விஜயலட்சுமி வெளியிட்ட கடைசி வீடியோ!

சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…

2 hours ago

மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?

நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…

3 hours ago

அமைச்சர் என் குடும்பத்தைப் பற்றி அப்படி பேசினார்.. மருத்துவரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி!

கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…

4 hours ago

This website uses cookies.