திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே பூபதி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சதீஷ்(30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவியின் சகோதரி கணவனை இழந்த நிலையில் தனது மகனுடன் ஜோலார்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார்.
இதையும் படியுங்க: அதிகாலையில் கோரம்.. டிப்பர் லாரி மோதி சிதறிப் போன வாகன ஓட்டியின் உடல்.!!
இந்நிலையில் மனைவியின் சகோதரி என்கிற முறையில் சதீஷ் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து செல்வாராம்.
அதேபோல் நேற்று காலை வீட்டிற்கு சென்ற சதீஷ், மனைவியின் சகோதரி குளித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு தெரியாமலேயே சதீஷ் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த அந்தப் பெண் கூச்சலிடவே சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் இது குறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில், ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக சதீசின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதனை ஆய்வு செய்தபோது, அதில் பல பெண்களின் குளியலை வீடியோவாக பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…
நாளை ரிலீஸ் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள…
கோவை அருள்மிகு மருதமலை முருகன் திருக்கோயிலில் அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறியதாகக்…
தமன்னாவின் புதிய திரைப்படம்… 2022 ஆம் ஆண்டு தெலுங்கில் “ஓடெலா ரயில்வே ஸ்டேஷன்” என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இதில்…
This website uses cookies.