கோவை : கோவையில் தனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியாத தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). இவரது மனைவி லதா (41). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் கடந்த 7ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர்.
தொடர்ந்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் லதாவின் இளைய மகன் கடந்த 16ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்த லதா கதறி அழுதார். மேலும், கடந்த 20ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், சிகிச்சை பலனின்றி லதா நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இளைய மகன் விபத்தில் இறந்த சோகத்தை தாங்காமல் தாய் தற்கொலை செய்து கொண்ட சமபவம் அக்கம் பக்கத்தினரியேடே மிகுந்த சோகத்தை உருவாக்கியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.