கேரள மாநிலத்தில் கார் மீது புல்லட் மோதி புல்லட்டிலிருந்த நபர் சாலையில் விழுந்த போது பின்னால் வந்த மினி லாரி மோதி விபத்தின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவிலுள்ள பந்தளம் எம்சி சாலையில் நேற்று மாலை 4 மணிக்கு பிரதீப் என்பவர் தனது புல்லட்டில் சென்ற போது முன்னாள் சென்ற கார் மீது மோதியுள்ளார்.
இதில் புல்லட்டிலிருந்து கீழே விழுந்த பிரதீப் மீது பின்னால் வந்த மினிலாரி மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்தவரை பந்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரதீப், மீண்டும் கேரளா திரும்பி வந்து மர வியாபாரம் செய்து வந்தார்.பின்னர் விபத்திற்கு பிறகு நிற்காமல் சென்ற மினி லாரியை செங்குன்றம் போலீசார் தடுத்தி நிறுத்தி ஓட்டுநரை கைது செய்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ரஜினிக்கு நிகர் வேற யாரும் இல்லை.! ரஜினியின் மேக்கிங் வீடீயோவை சீக்கிரமாக ரிலீஸ் பண்ணுங்க,பல பேருக்கு அது உதவும் என…
பிசிசிஐ புதிய விதிகள் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் வீரர்களுக்கும்,அணி நிர்வாகத்திற்கும் பிசிசிஐ பல புதிய விதிமுறைகளை விதித்திருப்பது…
பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன் தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது…
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பட்டியலிட்டுள்ளார். இது குறித்து…
திருச்சி பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அதில், ராஜீவ்…
பட வேலையை கையில் எடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும்,தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சினிமா…
This website uses cookies.