கேரள மாநிலத்தில் கார் மீது புல்லட் மோதி புல்லட்டிலிருந்த நபர் சாலையில் விழுந்த போது பின்னால் வந்த மினி லாரி மோதி விபத்தின் பதை பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவிலுள்ள பந்தளம் எம்சி சாலையில் நேற்று மாலை 4 மணிக்கு பிரதீப் என்பவர் தனது புல்லட்டில் சென்ற போது முன்னாள் சென்ற கார் மீது மோதியுள்ளார்.
இதில் புல்லட்டிலிருந்து கீழே விழுந்த பிரதீப் மீது பின்னால் வந்த மினிலாரி மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்தவரை பந்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த பிரதீப், மீண்டும் கேரளா திரும்பி வந்து மர வியாபாரம் செய்து வந்தார்.பின்னர் விபத்திற்கு பிறகு நிற்காமல் சென்ற மினி லாரியை செங்குன்றம் போலீசார் தடுத்தி நிறுத்தி ஓட்டுநரை கைது செய்தனர். இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.