தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சாலையோரம் முதியவரின் சடலத்தை எரிவதை கண்டு பயந்து ஓடிய பள்ளி மாணவ மாணவிகள் வீடியோ வைரலாகி வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கே.ஆர்.எஸ் இரு அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. தொடர்ந்து இடைவிடாத மழையின் காரணமாகவும், மேட்டூருக்கு செல்லும் நீரானது ஏரியூர், நெருப்பூர் உள்ள பகுதிகளிலும் விளை நிலங்கள் மற்றும் இடுகாடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
குறிப்பாக ஏரியூர் அடுத்துள்ள சித்திரைபட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய காவிரி ஆற்றங்கரையோரம் தான் அடக்கம் செய்து வருகின்றனர்.
ஆனால் மழை காலங்களில் அதிகளவு ஆற்றுகரையோரம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் இன்று அப்பகுதியில் முதியவர் ஒருவர் இறந்ததையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது மயானத்திற்கு செல்லும் வழிநெடுக்கிலும் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் செய்வது அறியாத அவர்கள் இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்தனர்.
பின்னர் இறந்து போன முதியவரின் இறுதி சடங்கை சாலையோபரத்திலேயே செய்தனர். பின்னர் வேறு வழியின்றி சாலையோரத்திலேயே முதியவின் சடலத்தை போட்டு எரித்தனர்.
அப்போது அந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பதறி ஓடினர். இந்த காட்சியை அப்பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளதால் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் இது போன்று இடுகாடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் மேட்டுபகுதியில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.