Categories: தமிழகம்

நடுரோட்டில் எரிந்த பிணம் : பயந்து ஓடிய பள்ளி மாணவ, மாணவிகள்… வெள்ளத்தால் தணிந்த சுடுகாடு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சாலையோரம் முதியவரின் சடலத்தை எரிவதை கண்டு பயந்து ஓடிய பள்ளி மாணவ மாணவிகள் வீடியோ வைரலாகி வருகிறது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபிணி மற்றும் கே.ஆர்.எஸ் இரு அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கர்நாடக அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. தொடர்ந்து இடைவிடாத மழையின் காரணமாகவும், மேட்டூருக்கு செல்லும் நீரானது ஏரியூர், நெருப்பூர் உள்ள பகுதிகளிலும் விளை நிலங்கள் மற்றும் இடுகாடுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.

குறிப்பாக ஏரியூர் அடுத்துள்ள சித்திரைபட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய காவிரி ஆற்றங்கரையோரம் தான் அடக்கம் செய்து வருகின்றனர்.

ஆனால் மழை காலங்களில் அதிகளவு ஆற்றுகரையோரம் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் இன்று அப்பகுதியில் முதியவர் ஒருவர் இறந்ததையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் மயானத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது மயானத்திற்கு செல்லும் வழிநெடுக்கிலும் 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் செய்வது அறியாத அவர்கள் இறந்த முதியவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்தனர்.

பின்னர் இறந்து போன முதியவரின் இறுதி சடங்கை சாலையோபரத்திலேயே செய்தனர். பின்னர் வேறு வழியின்றி சாலையோரத்திலேயே முதியவின் சடலத்தை போட்டு எரித்தனர்.

அப்போது அந்த வழியாக பள்ளிக்கு சென்ற மாணவ, மாணவிகள் அச்சத்துடன் பதறி ஓடினர். இந்த காட்சியை அப்பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதலங்களில் வெளியிட்டுள்ளதால் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் காலங்களில் இது போன்று இடுகாடுகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை உள்ளதால் அப்பகுதி மக்கள் மேட்டுபகுதியில் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தமிழகம் ஒரு ஆன்மீக பூமி…கோவை ஈஷா மஹாசிவராத்திரியில் அமித்ஷா பேச்சு..!

மக்கள் வெள்ளத்தில் கோவை ஈஷா கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய…

9 hours ago

தென்னிந்தியாவிலே முதல் படம்…நெட்ப்ளிக்ஸை திணறடித்த லக்கி பாஸ்கர்.!

OTT-யில் சாதனை படைத்த லக்கி பாஸ்கர் தமிழில் தனுஷை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கிய வெங்கி அட் லூரி கடந்த…

10 hours ago

நான் தான் முதல் பொண்டாட்டி…மாதம்பட்டி ரங்கராஜுக்கு போட்டி…வைரலாகும் இன்ஸ்டா பதிவு.!

ரகசிய உறவு குறித்து மனம் திறந்த ரங்கராஜ் மனைவி தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர்…

11 hours ago

ராமராஜனுடன் காதல் கிசுகிசு.. சினிமாவை விட்டே ஓடிய பிரபல நடிகை.!!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றும் ரசிகர்களால் போற்றப்படுபவர் ராமராஜன். திரைமறைவில் பலருக்கும் உதவி செய்து வருபவர்.…

11 hours ago

ஷங்கரை கை கழுவிய லைக்கா…இந்தியன் 3 ரிலீஸ் ஆகுமா..தொடரும் சிக்கல்.!

இந்தியன் 3 பட ரிலீஸில் சிக்கல் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர்,பிரபலமான நடிகர்களை வைத்து…

12 hours ago

ஆண்ட்ரியாவுக்கு டஃப் கொடுத்த கவின்.. மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் மாஸ்க்!

நடிகர் கவின் சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் கால் பதித்த கவின், தனித்துவமான கதைகளை தேடி தேடி தேர்வு செய்து…

12 hours ago

This website uses cookies.