கடலூர் : சிதம்பரத்தில் பெண் ஒருவரை பேருந்து நிறுத்தத்தில் ஏற்றாமல் சென்ற அரசு பேருந்தை நிறுத்திய நபருடன் அரசுப் பேருந்து ஓட்டுநர் தகராறில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிதம்பரத்திலிருந்து வெள்ளூர் கிராமத்திற்கு அரசு பேருந்து தடம் எண் 23ஏ நேற்று மாலை பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது, குறுக்கு ரோடு என்ற பகுதியில் அதங்குடி சிறுகழிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவரின் தாய் நின்று கொண்டிருந்தபோது, பேருந்தின் ஓட்டுனர் நடராஜன் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுபாஷ் மற்றும் அவரது உறவினர் ரங்கநாதன் என்பவர் இளநாங்கூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்து நிறுத்தி உள்ளனர். அப்போது ஏன் பேருந்தை நிறுத்தாமல் சென்றீர்கள்…? என சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் பேருந்து ஓட்டுனர் நடராஜன் இடம் கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனால ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் நடராஜன், சாலையின் நடுவே பேருந்தை நிறுத்திக் கொண்டு, பேருந்தை எப்படி நீ நிறுத்தலாம் என கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்து சுபாஷ் புறப்பட முயற்சி செய்கிறார்.
ஆனால், சுபாஷை நிறுத்தி அடியாட்களை போல் எங்க செல்கிறாய் என மிரட்டும் பாணியில் பேசிய அரசுப் பேருந்து ஓட்டுநர், “எந்த துணிச்சலில் நீ வண்டியை மறைத்தாய். சாலையில் எவ்வளவு வாகனங்கள் நிற்கிறது பார்..?, இந்த இடத்தை விட்டு நீ செல்ல முடியாது. உன்னோட பவரை நீ காமி,” என பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்தை சாலையில் நிறுத்தி தகராறு செய்தார். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், பேண்ட் சட்டையை கழட்டினால் நாங்களும் உங்களை மாதிரி தான் என கெத்து காண்பித்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரம் தாலுகா காவல் நிலைய போலீசார், ஓட்டுநர் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் சுபாஷ் மற்றும் உறவினர் ரங்கநாதன் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று அரசு பேருந்தை சாலையில் நடுவே நிறுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னையில், இன்று (பிப்.26) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 50 ரூபாய்க்கு…
தவெக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாமல்லபுரம் அருகே பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட…
முதல்வரே தமிழகத்தில் மூன்றாவது மொழி என்னவென்று முடிவெடுக்க முடியாது, பெற்றோர் ஆசிரியர் கழகம் தான் முடிவெடுக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.…
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
This website uses cookies.