கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மாநில பேரிட மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகள் லதாவும் பாதிக்கப்பட்டார்.
இந்த விபத்து நடந்த நேரத்தில் அவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட லதாவின் எதிர்கால நலன் கருதி அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வந்தது.
இதை ஏற்று அவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உதவியாளர் பணியிடத்திற்கு தேவையான குறைந்தபட்ச கல்வி தகுதி பெற்றுள்ளதால் அவருக்கு அந்த பணி கொடுக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணி நியமன ஆணை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் லதாவிடம் வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பலரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.
இந்திய சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருகிறார் நாகர்ஜூனா. தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என நடித்து வரும் நாகர்ஜூனா…
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
This website uses cookies.