Categories: தமிழகம்

2017ல் கோவை அருகே நடந்த பேருந்து நிலைய விபத்து : 5 வருடம் கழித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை..!!

கோவை, சோமனூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை கடந்த 2017 ஆம் ஆண்டு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கூரையின் கீழ் நின்று கொண்டிருந்த பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மேலும் சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மாநில பேரிட மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரது மகள் லதாவும் பாதிக்கப்பட்டார்.

இந்த விபத்து நடந்த நேரத்தில் அவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் விபத்தில் பாதிக்கப்பட்ட லதாவின் எதிர்கால நலன் கருதி அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டு வந்தது.

இதை ஏற்று அவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் உதவியாளர் பணியிடத்திற்கு தேவையான குறைந்தபட்ச கல்வி தகுதி பெற்றுள்ளதால் அவருக்கு அந்த பணி கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான பணி நியமன ஆணை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் லதாவிடம் வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பலரும் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

2 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

2 hours ago

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் முதல் காட்சி வெளிவராது- விநியோகஸ்தர்கள் திட்டவட்டம்

தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

3 hours ago

அமைச்சரின் சகோதரர் கொலை வழக்கில் போலி என்கவுண்டர் நடத்த பிளான் : சீமான் பகீர் குற்றச்சாட்டு!

திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…

4 hours ago

மகன் தீ விபத்தில் சிக்கியதை அறிந்தும் மக்களை சந்தித்த துணை முதல்வர்.. நெகிழ வைத்த பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…

5 hours ago

This website uses cookies.