அதிக ஒலி எழுப்பி பொதுமக்களை அச்சுறுத்திய பேருந்துகள்.. அபராதம் விதித்து பறிமுதல் செய்த போலீசார்!
திண்டுக்கல் பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரை அடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்கங்கானிப்பாளர் பிரதீப் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிபின் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சினாமூர்த்தி சார்பு ஆய்வாளர் திலீப் குமார் மற்றும் காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகமாக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்தி வந்த பேருந்துகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு சக்கர வாகனங்களில் சைலன்சர்களை பொறுத்தி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
40 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பறிமுதல் செய்து தலா 10 ஆயிரம் வீதம் 3 பேருந்துகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் இரண்டு சக்கர வாகனங்களில் அதிக அதிர்வை ஏற்படுத்தும் புகைபோக்கி பயன்படுத்திய 40 வாகனங்களுக்கு 42500 ரூபாய் அபராதம் விதித்து சைலன்சர்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் சைலன்சர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எச்சரிக்கை
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.