தொழில் பார்ட்னர் அழைத்துச் சென்று அடைத்து வைத்து பல கோடிக்கு செக் கையெழுத்து பெற்றுக் கொண்டு தன்னை துன்புறத்துவதாக கதறும் பெண் . வைரலான வீடியோ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியை சேர்ந்த பிரவீனா, சேகர் தம்பதியினர். கணவர் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் மங்கலம் சாலை பகுதியில் அப்பெண் பியூட்டி பார்லர் அழகு நிலையம் நடத்தி வந்தார்,
இந்நிலையில் வாடிக்கையாளராக வந்து செல்லும் செட்டிபாளையம் சாலை அருகே வசிக்கும் தமிழ்செல்வி அவரது கணவர் சிவகுமார் என்பவர் டெக்ஸ்டைல்ஸ் தொழில் செய்யலாம் என்று வீட்டை வங்கி கடன் வைத்து கடன் 75000 வரை பெற்று கொண்டு தொழில் செய்ததாக மேலும் சுமார் மூன்று கோடி ரூபாய் பணம் வரை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது வீட்டு சொத்து பத்திரம் ஏலத்துக்கு வந்த நிலையில் பணத்தை திருப்பி கேட்க முயன்ற போது தொழில் விஷயமாக வெளியூர் அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்று திருச்சி பகுதியில் தன்னை அடைத்து வைத்து சில பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டதாகவும் மேலும் தன் தாய் தந்தையிடம் தனக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டதாகவும் மேலும் தான் வேறு எங்கும் செல்ல இயலாத சூழ்நிலையை உருவாக்கி விட்டதாகவும் தன்னை காப்பாற்றும் படி அப்பெண் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே பிரவீனாவின் தாய் ஸிலோ மீனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காணாமல் போன வழக்கை பதிவு செய்த பல்லடம் போலீசார் தேடி வரும் நிலையில் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்டவர்.…
This website uses cookies.