திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இருசக்கர வாகனம் பேரிகார்டில் மோதி தொழிலதிபர் பலியான சிசிடிவி காட்சி வெளியாகி பதற வைத்துள்ளது.
கரூர் மாவட்டம் பவளபுரியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் இளங்கோ இவர் நேற்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் கருவறையை நோக்கி வந்து கொண்டிருந்தார்
அப்போது வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பூர் என்னுமிடத்தில் திண்டுக்கல் கரூர் தேசிய நான்கு வழி சாலையில் வந்து கொண்டிருந்தபோது அங்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் எதிர்பாராதவிதமாக மோதி கீழே விழுந்து தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் தற்போது இது குறித்த நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டில் மோதி தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.