தமிழகம்

அப்டின்னா இவுங்க யாரு? சலசலப்பான ஆனந்த் பேச்சு.. தவெகவுக்கு பின்னடைவா?

மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் அல்லது ஹெலிகாப்டரில் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கூறியுள்ளார்.

விழுப்புரம்: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்பட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கலந்து கொண்டார்.

இதனையடுத்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் பெண்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசிய என்.ஆனந்த், “தமிழக வெற்றிக் கழத்தில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக உள்ளனர். தமிழகம் முழுவதும் 34 இடங்களில் விலையில்லா உணவகம் மூலமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தளபதி விலையில்லா வீடு கட்டும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக வெற்றிக் கழகம் செயல்படுத்தி வருகிறது. மேலும், பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தவெகவில் போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், உழைப்பவர்களுக்கு தான் கட்சியில் பதவி வழங்கப்படும். மாற்றுக் கட்சியில் இருந்து காரில் வந்தாலும் அல்லது ஹெலிகாப்டரில் வந்தாலும் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது” எனத் தெரிவித்தார்.

இந்தப் பேச்சுக்கு தற்போது தவெகவுக்குள்ளே புயல் கிளம்பியுள்ளது. காரணம், விசிகவில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் விலகி விஜயின் தவெகவில் இணைந்த ஆதர் அர்ஜுனாவுக்கு தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு, விஜய் செல்லும் இடங்களில் முன்வரிசையிலும் நிற்கிறார்.

இதையும் படிங்க: கண்ணே கலைமானே.. அரங்கேறிய இளையராஜா சிம்பொனி.. அதிர்ந்த அரங்கம்!

அதேபோல், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிடிஆர் நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படாது எனக் கூறியிருப்பது வெறும் கண்துடைப்பு எனக் கூறுகின்றனர்.

அதேநேரம், திமுக, நாதக உள்ளிட்ட முக்கிய கட்சிகளில் இருந்து மேலும் சிலர் விலகி தவெகவில் இணைய உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் கூறி, திமுக உள்கட்டமைப்பு பணிகளை முடுக்கிவிடும் நிலையில், ஆனந்தின் இந்தப் பேச்சு தவெகவுக்கு பின்னடைவாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

Hariharasudhan R

Recent Posts

ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?

அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…

12 hours ago

இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…

5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

13 hours ago

திமுகவும், கைக்கூலிகளும் வக்பு சொத்தை அபகரித்துள்ளனர் : பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…

13 hours ago

காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று மீண்டும் அதே இடத்தில் நடத்துவோம் : பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…

13 hours ago

வடிவேலு கூட அப்படி ஆகிடுச்சு? மத்தவங்க இருந்ததுனால தப்பிச்சேன்- கவர்ச்சி நடிகை ஓபன் டாக்

வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…

14 hours ago

This website uses cookies.