நந்தன் படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதை குறையாக கருதாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு குரல் கொடுக்க வேண்டும் என சினிமா இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாதிய வன்கொடுமைக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் ஒற்றை மனுஷியாய் போராடுகிறார்.
பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டியும் அவமரியாதை செய்திருக்கிறார்கள்.
இது என்றைக்கோ நடந்தது அல்ல, 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நம் கண் எதிரே நடக்கிற துயரம்… ‘நந்தன்’ படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதைக் குறையாகக் கருத வேண்டாம்.
‘நந்தன்’ படத்தில் காட்டியதைப் போல் ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலருக்கும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
உடன் நிற்க ஒருவர்கூட இல்லாமல், ஓர் அநாதை போல் பஞ்சாயத்து தலைவி அமர்ந்து போராடுவது ஏன் எவர் மனதையும் அசைக்கவில்லை?
என்றைக்கோ நடந்தது, எங்கேயோ நடந்தது என இனியும் ஈயம் பூசாமல், தயவுகூர்ந்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கொடுவினைகளுக்கு முடிவு கட்டுங்கள்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.