நந்தன் படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதை குறையாக கருதாமல் பட்டியலின பஞ்சாயத்து தலைவருக்கு குரல் கொடுக்க வேண்டும் என சினிமா இயக்குநர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் பஞ்சாயத்து தலைவர் சங்கீதா சாதிய வன்கொடுமைக்கு எதிராக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் ஒற்றை மனுஷியாய் போராடுகிறார்.
பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவரை நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்துப் போட விடாமலும், சாதியரீதியாகத் திட்டியும் அவமரியாதை செய்திருக்கிறார்கள்.
இது என்றைக்கோ நடந்தது அல்ல, 2.10.24 காந்தி ஜெயந்தி நாளில் நம் கண் எதிரே நடக்கிற துயரம்… ‘நந்தன்’ படத்தை மறுபடி மறுபடி குறிப்பிடுவதைக் குறையாகக் கருத வேண்டாம்.
‘நந்தன்’ படத்தில் காட்டியதைப் போல் ஒடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பலருக்கும் இத்தகைய அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
உடன் நிற்க ஒருவர்கூட இல்லாமல், ஓர் அநாதை போல் பஞ்சாயத்து தலைவி அமர்ந்து போராடுவது ஏன் எவர் மனதையும் அசைக்கவில்லை?
என்றைக்கோ நடந்தது, எங்கேயோ நடந்தது என இனியும் ஈயம் பூசாமல், தயவுகூர்ந்து பட்டியலின பஞ்சாயத்து தலைவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்கள் எதிர்கொள்ளும் கொடுவினைகளுக்கு முடிவு கட்டுங்கள்.
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.