Categories: தமிழகம்

ஆளுங்கட்சி உறுப்பினரே எதிர்க்கட்சி போல பேசலாமா? அடிப்படை வசதி கேட்ட மண்டல தலைவருக்கும் மேயருக்கும் இடையே மோதல்!!

ஆளுங்கட்சி உறுப்பினரே எதிர்க்கட்சி போல பேசலாமா? அடிப்படை வசதி கேட்ட மண்டல தலைவருக்கும் மேயருக்கும் இடையே மோதல்!!

வேலூர் மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மேயர் சுஜாதா,துணை மேயர் சுனில், ஆணையர் ஜானகி தலைமையில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது ஒன்றாவது மண்டல குழு தலைவர் பேசுகையில், எனது மண்டலத்தில் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை, மின் விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை என கேள்வி எழுப்பினார். 

இதற்க்கு பதில் அளித்து பேசிய (ஆவேசமாக) மேயர் சுஜாதா, ஒரு ஆளும் கட்சி உறுப்பினரே எதிர்கட்சி போல் எப்போதுமே திமுக அரசை குறை கூறி பேசி வருகிறார். அரசை அவமானப்படுத்துவது போல் பேசுரிங்க இது சரியல்லா என பேசினார்.

இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றியதால் அவையில் கூச்சல் குழப்பம் நீடித்தது. பின்னர் தனக்கு அவையில் உரிய மரியாதை இல்லை என வெளியேற முயற்சித்தார். 

பின்னர் ஒன்பதாவது வார்டு அதிமுக உறுப்பினர் ரமேஷ் பேசுகையில், எனது வார்டில் 2 கோடி ரூபாய் வரை வரி வசூல் செய்யப்படுகிறது அதை என்னதான் பண்றிங்க ஆனால் இதுவரை 2 1/2 ஆண்டுகளாக எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேயரை கேட்டால் குழந்தை மாதிரி நடந்து கொள்கிறார் மாற்றி மாற்றி பதில் சொல்கிறார்.

இரண்டரை ஆண்டு ஆகியும் புதியதாக வந்த மேயர் அப்படியே தான் இருக்கிறார் என பேசினார். அப்போது மாநகராட்சி தேர்தல் முடிந்து இரண்டரை ஆண்டு ஆகவில்லை அதிமுக உறுப்பினர் பொய்யான தகவலை சொல்வதாக கூறி அதிமுக உறுப்பினரை திமுக உறுப்பினர்கள் அமர சொன்னதால் இரு கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர் பேச முயற்சித்த போது அவரிடம் இருந்து மைக்கை பிடுங்க திமுக உறுப்பினர்கள் முயற்சி செய்தனர். இதனால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, 

வார்டில் மேற்கொள்ளப்படாத பணிகள் குறித்து கேள்வி எழுப்ப அதற்கு உரிய பதில் கிடைக்காததால் அதிமுக அதிமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளுவுக்கு பிறகு ஏழு அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடுடப்பு செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

8 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

8 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

9 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

9 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

10 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

10 hours ago

This website uses cookies.