2வது முறையாக ரத்து… அதுவும் தேதி குறிப்பிடாமல் : அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 52-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், 4.11.2023 அன்று தஞ்சை மாநகரில் பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.
இதனையடுத்து டெல்டா மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருப்பதாலும், 4.11.2023 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, 16.11.2023 – வியாழக் கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது, தஞ்சையில் நவம்பர் 16-ல் அதிமுக நடத்தவிருந்த பொதுக்கூட்டம் கனமழை எச்சரிக்கை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4-ஆம் தேதி நடைபெறவிருந்த கூட்டம், கனமழையால் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த முறை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.