தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு கட்சி வேட்பாளர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். கோவை மாவட்டத்திலும் வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று கோவை தெற்கு மண்டலம் 94 வார்டில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உள்ள சக்திவேல்(45) என்பவர் குனியமுத்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா கவச உடையான பிபிஇ உடை அணிந்து சென்று மனுத்தாக்கல் செய்துள்ளார். கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இது போன்று வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
முதலில் இவரது உடையை கண்டு அதிகாரிகள் வியப்படைந்த நிலையில் இவரின் விளக்கத்தை கேட்டபின் மனுவை பெற்று கொண்டனர். இவரின் வித்தியாசமான மனு தாக்கலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இவர் அப்பகுதியில் கொரோனா காலத்தில் பல்வேறு சேவைகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக - பாஜக கூட்டணி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பாஜகவுடன் கூட்டணியே அமைக்க மாட்டோம் என கூறி வந்த எடப்பாடி…
அதிமுக உடன் மீண்டும் பாஜக கூட்டணி போடுவதாக நேற்று சென்னை வந்த அமித்ஷா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…
லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ… “வழக்கு எண் 18/9” திரைப்படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீ. இவர்…
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே கூட்டணி கணக்கு,…
தொடர் தோல்வி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றை முன்தினம் இரவு சென்னை வந்தார். நேற்று அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க…
This website uses cookies.