ஆந்திராவில் இருந்து கோவைக்கு கஞ்சாவை கடத்தி வர முயன்ற இரு கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் – கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்னையை நோக்கி சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், 20 கிலோ எடையுள்ள 4 கஞ்சா பண்டல்கள் இருந்தன.
இதனைக் கண்டு அதிர்ந்து போன போலீசார், அவற்றை பறிமுதல் செய்ததுடன், கோவையைச் சோர்ந்த வசந்த் (22), சரண் (20), ஆட்டோ ஓட்டுநர் நந்தகுமார் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், வசந்த், சரண் ஆகியோர் கோவையில் உள்ள பிரபல தனியார் கலூரியில் பி.காம் பயின்று வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த ஒருவர், வசந்த்திடம் பணத்தை கொடுத்து ஆந்திராவில் உள்ள கஞ்சாவை எடுத்து வரச் சொன்னதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.