கல்வராயன் மலைப்பகுதியில் சுமார் அரை ஏக்கர் வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிரிட்டது தொடர்பாக வனத்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி: கடந்த ஆண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனையைத் தடுப்பதில், அம்மாவட்ட காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கல்வராயன்மலை பெருமாநத்தம் கிராம மலை உச்சியில், அனுமதி இன்றி கஞ்சா செடி பயிர் செய்து வந்ததாக கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிபாரதி, தனிப்பிரிவு காவலர் பிரபு ஆகியோர் தலைமையிலான சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் போலீசார், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி ரோந்துப் பணியின் போது, அங்கு பயிரிடப்பட்டு இருந்த கஞ்சா செடிகளைக் கண்டுபிடித்து, அது தொடர்பாக கோவிந்தராஜ் மற்றும் பர்வதம் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், கல்வராயன்மலையில் உள்ள பெருமாநத்தம் பகுதியில் சற்றேறக்குறைய அரை ஏக்கரில் ஆயிரத்து 600 கஞ்சா செடிகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அதாவது, 100 கிலோ கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஸ்கூட்டியில் சென்ற பெண்.. நண்பனுக்கு அழைப்பு.. இறுதியில் நடந்த துயரம்!
மேலும், இது தொடர்பாக தனியார் நாளிதழிடம் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் தலைமை வனச்சரகர் பெரியசாமி, “வனப்பகுதிக்குச் சொந்தமான பகுதியில் கஞ்சா பயிரிட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பு உண்டு. அதேநேரம், எங்களது துறை சார்பாகவும் விசாரணை நடத்தி, கஞ்சா செடி பயிரிட்டவர்களுடன் வனத்துறையினருக்குத் தொடர்பிருக்கிறதா என்றும் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட வன அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.