Categories: தமிழகம்

திமுக ஒன்றிய குழு தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு?.. பின்னணியில் திட்டமிட்ட சதியா?..

செங்குன்றம் அருகே திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களில் பேட்டரி இணைத்து வைக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு. பெட்ரோல் குண்டு வீச முயற்சியா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் பகுதியைச் சேர்ந்தவர் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திருமால். இவரது மனைவி தங்கமணி திருமால் புழல் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவராக பொறுப்பு வகுத்து வருகிறார். இன்று நண்பகல் இவரது வீட்டின் வெளியே கழிவு நீர் செல்லும் கால்வாயின் மீது மூன்று கேன்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு டேப்பால் சுற்றி பேட்டரியுடன் இணைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர் பேட்டரியுடன் பெட்ரோல் நிரப்பப்பட்ட கேன்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசுவதற்காக தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டதா அல்லது யாரையேனும் அச்சுறுத்துவதற்காக இதுபோன்ற செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கமணி திருமால் குடும்பத்துடன் வெளியே சென்று இருந்த நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்மையில் சுதந்திர தினத்தன்று சோழவரத்தில் திமுக பிரமுகர் வீடு உட்பட இரண்டு இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சூழலில் தற்போது திமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு போல கேன்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

56 minutes ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

1 hour ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

2 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

2 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

2 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

3 hours ago

This website uses cookies.