உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியாது… தொகுதிப் பங்கீட்டில் கறார் காட்டிய மதிமுக!!
திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது. இந்த நிலையில், இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் ம.தி.மு.க. குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
மதிமுக சார்பில் ஆடிட்டர் அர்ஜூனராஜ், செந்திலதிபன், அந்திரிதாஸ், சேஷன் ஆகிய 4 பேர் கொண்ட குழு பங்கேற்றனர். திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு பின், திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது என மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், மக்களவை தேர்தலில் போட்டியிட 2 தொகுதிகளை கேட்டுள்ளோம். 2 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கக் கேட்டுள்ளோம். இந்த முறை எங்கள் கட்சி சின்னத்தில்தான் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
மதிமுக சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்பதுதான் கட்சி நிலைப்பாடாக உள்ளது, இதுகுறித்து திமுக குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர். கடந்த முறை ஈரோடு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மதிமுகவுக்கு திமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.