மதவாத குற்றங்களை கட்டுப்படுத்த உளவு பிரிவுக்கு கூடுதல் போலீசார் நியமனம் செய்யப்படும் என மாநகர காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்து ஜமேஷா முபின் பலியானார். இந்த வழக்கு தொடர்பாக அவரது உறவினர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கார் வெடிப்பு சம்பவம் நடந்ததை முன் கூட்டியே கண்காணிக்க உளவுத் துறை தவறிவிட்டதாக கூறப்பட்டது. கோவை நகரில் மதவாத குற்றங்களை கண்காணிக்க பி.ஆர்.எஸ் வளாகத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளது.
இதில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் 7 போலீசார் உள்ளனர். அவர்கள் தகவலை சேகரித்து துணை சூப்பிரண்டுக்கு தெரிவிக்கிறார்கள். இதே போல் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் கட்டுப்பாட்டில் சிறப்பு புலனாய்வு பிரிவு உள்ளது.
இதில் 1 உதவி ஆணையர், 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப் இன்ஸ்பெக்டர் மற்றும் 8 போலீசார் உள்ளனர். தற்பொழுது உதவி ஆணையர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கிடையே தகவல்களை சேகரிப்பதற்காக புலனாய்வு பிரிவுக்கு தற்காலிகமாக ஆயுதப்படை போலீசார் 7 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கோவையில் உளவுத் துறைக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர்.
இது குறித்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: எஸ்.ஐ.சி.க்கு கூடுதல் பலம் சேர்ப்பதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக 1 இன்ஸ்பெக்டர் பதவி 22 போலீசார் பணியிடங்களை உருவாக்க உள்ளோம்.
இன்ஸ்பெக்டர் நிர்வாகப் பணியை மேற்கொள்வார். அந்த பிரிவில் உள்ள 30 போலீசாரும் ஒவ்வொரு போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளை கண்காணித்து தகவல்களை சேகரிப்பார்கள். இவ்வாறு அவர் அவர் கூறினார்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.