Categories: தமிழகம்

பேருந்து மீது கார் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி : பழனி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த போது நிகழ்ந்த துயரம்!!

திண்டுக்கல் அருகே காரும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித் (26). இவர் கொரியர் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இந்நிலையில், இன்று திருவனந்தபுரத்திலிருந்து தனது மனைவி, இரண்டு வயது குழந்தை மற்றும் உறவினர்கள் 10 பேருடன் தனது நண்பரின் காரில் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

காரை அபிஜித்தின் நண்பர் கண்ணன் (29) என்பவர் ஓட்டினார். அந்த கார் மதுரை – பழனி நெடுஞ்சாலையில் பண்ணைப்பட்டி பகுதியில் வந்த போது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி, எதிர் திசையில் பழனியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த கார் ஓட்டுநர் கண்ணன், அபிஜித் , அசோக் உள்ளிட்ட எட்டு பேரும், பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து திண்டுக்கல் கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அபிஜித்தின் இரண்டு வயது குழந்தைக்கு பழனியில் முடி காணிக்கை செலுத்துவதற்காக திருவனந்தபுரத்திலிருந்து நேற்று இரவு குடும்பத்தோடு காரில் வந்த போது நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

45 minutes ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

47 minutes ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

1 hour ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

2 hours ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

2 hours ago

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

3 hours ago

This website uses cookies.