Categories: தமிழகம்

பேருந்து மீது கார் மோதியதில் 2 வயது குழந்தை உள்பட மூவர் பலி : பழனி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்த போது நிகழ்ந்த துயரம்!!

திண்டுக்கல் அருகே காரும், அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுங்காடு கீழாநூர் பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித் (26). இவர் கொரியர் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இந்நிலையில், இன்று திருவனந்தபுரத்திலிருந்து தனது மனைவி, இரண்டு வயது குழந்தை மற்றும் உறவினர்கள் 10 பேருடன் தனது நண்பரின் காரில் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

காரை அபிஜித்தின் நண்பர் கண்ணன் (29) என்பவர் ஓட்டினார். அந்த கார் மதுரை – பழனி நெடுஞ்சாலையில் பண்ணைப்பட்டி பகுதியில் வந்த போது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி, எதிர் திசையில் பழனியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த கார் ஓட்டுநர் கண்ணன், அபிஜித் , அசோக் உள்ளிட்ட எட்டு பேரும், பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து திண்டுக்கல் கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரின் முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி எதிர் திசையில் வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அபிஜித்தின் இரண்டு வயது குழந்தைக்கு பழனியில் முடி காணிக்கை செலுத்துவதற்காக திருவனந்தபுரத்திலிருந்து நேற்று இரவு குடும்பத்தோடு காரில் வந்த போது நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்.. சினிமா பாணியில் தாலி கட்டிய நபர் செய்த காரியம்.!(வீடியோ)

ஓசூர் அருகே மலைக்கிராமத்தில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்து, அவரது கணவர் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்ற உறவினர்களின்…

13 minutes ago

20 ஆண்டுகளாக சம்பளம் இல்லை…பாலிவுட்டில் அசத்தும் பிரபல நடிகர்.!

அமீர்கானின் நெகிழ்ச்சி செயல் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அமீர்கான்,எப்போதும் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதோடு,தனது படங்களின் வெற்றிக்காக புதுமையான…

14 minutes ago

ஒரே ஆடையில் ஓராண்டில் 30 பயணங்கள்.. ரன்யா ராவ் சிக்கியது எப்படி? விசாரணை வலையில் Ex DGP!

தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு: கடந்த மார்ச்…

30 minutes ago

வாய்க்கால் தகராறு.. ஜாமீனில் வந்த பாஜக நிர்வாகி மீண்டும் கைது!

விளைநிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணா கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம்:…

1 hour ago

பட்டும் திருந்தல..’ரெட்ரோ’ படப்பிடிப்பில் அலும்பு பண்ணும் சூர்யா..கண்ட்ரோல் செய்த நண்பன்.!

ரெட்ரோ பட விவகாரம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "கங்குவா" படம் எதிர்பார்த்த அளவில்…

1 hour ago

This website uses cookies.