திருப்பூர் : தாராபுரம் அருகே சாலையில் சென்ற கார் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் காரை ஓட்டி வந்த தொழிலதிபர் உயிர்தப்பினார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 44) தொழிலதிபர். இவர் புதுக்கோட்டையில் இருந்து காரில் தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது முருகேசன் இரகம்பட்டி பிரிவு அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் உடைந்து விழுந்தது.
அப்போது காரில் இருந்து தப்பித்து முருகேசன் உயிர் தப்பினார். இதற்கிடையில் மின்கம்பிகள் அறுந்து கார் மீது விழுந்ததில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.