திருப்பூர் : தாராபுரம் அருகே சாலையில் சென்ற கார் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் காரை ஓட்டி வந்த தொழிலதிபர் உயிர்தப்பினார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 44) தொழிலதிபர். இவர் புதுக்கோட்டையில் இருந்து காரில் தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது முருகேசன் இரகம்பட்டி பிரிவு அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் உடைந்து விழுந்தது.
அப்போது காரில் இருந்து தப்பித்து முருகேசன் உயிர் தப்பினார். இதற்கிடையில் மின்கம்பிகள் அறுந்து கார் மீது விழுந்ததில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் சுண்ணாம்பு காளவாய் பகுதியைச்…
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
This website uses cookies.