பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பாஜக நிர்வாகி செல்வகுமார் தவறான தகவல் பரப்பி இருந்தார்.
இதனை மறுத்த கோயில் நிர்வாகம் பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தத்திற்கான நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே வாங்கப்படுவதாக தெரிவித்தது.
மேலும் படிக்க: என் கூட அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணு.. உன் கள்ளக்காதலனை ரிலீஸ் பண்றேன்.. பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்த காவலர்!
இது தொடர்பாக வதந்தி பரப்பியதாக அடிவாரம் காவல்துறையில் பாஜக நிர்வாகிகள் செல்வகுமார் மற்றும் வினோச் பி செல்வம் மீது புகார் அளித்தது. புகாரைப் பெற்ற காவல் துறையினர் கோவையை சார்ந்த பாரதிய ஜனதா கட்சி தொழிற் பிரிவு மாவட்ட துணைதலைவர் செல்வகுமார் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.
தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது , மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பியது என இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இயக்குனர் மோகன் ஜி மீதும் தவறான தகவல் பரப்புவதாக கூறி பழனி கோவில் நிர்வாகம் சார்பில் பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.