Categories: தமிழகம்

கோவையில் காதல் தம்பதியை காரில் கடத்திய சம்பவம்: பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு..!!

கோவை: கோவையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியை தாக்கிய விவகாரத்தில் தந்தை, தாய் மாமன் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையை சேர்ந்த சினேகா சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவையை சேர்ந்த சினேகா மற்றும் விக்னேஷ்வர் கடந்த எட்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் சினேகா மற்றும் விக்னேஷ்வர் கடந்த ஒன்றாம் தேதி சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இரு வீட்டாரையும் அழைத்து பேசிய காவல் துறையினர் சமதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தம்பதியை வீட்டிற்கு வரச்சொல்லிய பெண்ணின் பெற்றோர் வீட்டில் வைத்து இருவரையும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்களை காரில் ஏற்றி அழைத்து சென்ற போது, லட்சுமி மில் சிக்னலில் கூச்சல் எழுப்பி காதல் தம்பதியினர் கதறிய நிலையில், பொது மக்கள் இருவரையும் போலீசார் உதவியுடன் மீட்டனர்.

இப்படியிருக்க சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சினேகா அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 294 பி, 323, 506 (1) ஆகிய பிரிவுகளில் சினேகாவின் தந்தை ஆறுமுகசாமி, தாய்மாமன் ரமேஷ், பெரியப்பா மகன் முனியசாமி, மற்றும் அமுல் என்பவர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

UpdateNews360 Rajesh

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

7 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

8 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

9 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

9 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

10 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

10 hours ago

This website uses cookies.